தன் கண்முன்னே உயிரிழந்த மகளை காப்பாற்ற முடியாமல் பரிதவித்த தாய்!

0

பிரித்தானியாவில் தாயின் கண்முன்னே கடலலையில் சிக்கி 5 வயது மகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள டோர்செட் பகுதியில் அமைந்துள்ள Durdle Door கடற்கரையில் சோபியா (32) மற்றும் சகோதரி ஜூலிட் உடன் 5 வயது சிறுமி Rose Carter மாலை நேரத்தை கழிக்கச் கடற்கரைக்கு சென்றனர்.

அப்போது திடீரென்று எழுந்த சக்தி வாய்ந்த அலை ஒன்று கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது.

இது குறித்து தாய் சோபியா கூறியதாவது,

அலையில் சிக்கி தடுமாறி விழுந்த சோபியா சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்ட நிலையில் 5 வயதான ரோஸ் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது கடல் உக்கிரமாக இருந்ததாகவும் ஆனால் அது ஆபத்தானதாக மாறும் என கருதவே இல்லை என சோபியா பின்னர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். தட்டுத்தடுமாறி ஒருவாறு தான் எழுந்த நிலையில் தனது மகள் கடலையில் சிக்குண்டு இழுத்துச் செல்வதை பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்தவர்களை உதவி செய்ய கோரிய நிலையில் இளம்பெண் ஒருவர் சிறுமி ரோஸை காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் அடுத்த அலை ஒன்று அவரையும் தாக்கியதால், அவரால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மீட்புக்குழுவினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர் சிறுமியின் சடலத்தை மீட்க முடிந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம்பெண் தன் நெஞ்சில் பச்சை குத்தியதால் நேர்ந்த அவலம்!
Next articleபிக்பாஸ் ரம்யா லைவ்-யில் மும்தாஜ், வைஷ்ணவியின் ரகசியத்தை போட்டு உடைத்தார் !