டிக்டாக் வீடியோவினால் ஹரியானாவில் நடந்த அசம்பாவிதம் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை அன்று அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 4 பேர் டிக்டாக் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இது சரியாக அரைமணி நேரத்துக்கு மேல் நடந்ததாகத் தெரிகிறது.
அப்போது துரதிஷ்டவசமாக ரயில் வேகத்துடன் வந்துள்ளது. இதைப் பார்த்த தினேஷ் என்பவர் சுதாரித்துக்கொண்டு கீழே குதித்துவிட்டார். ஆனால் மற்ற மூவர் மீது ரயில் மின்னல் வேகத்தில் மோதியது.
சுமார் 30 அடிதூரத்துக்கு அம்மூவரின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் மூவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: