தமிழ்த்திரையுலகில் சகோதிரிகளாக கோலோச்சியவர்களின் பட்டியல் அதிகம். நடிகை ராதா, அம்பிகா சகோதிரிகள், சிம்ரன் சகோதிரிகள், ஊர்வசி சகோதிரிகள் வரிசையில் நக்மாவும், ஜோதிகாவையும் சொல்லலாம்.
ஒரு காலகட்டத்தில் நக்மா, ஜோதிகா இருவருமே சினிமாவில் உச்சத்தில் இருந்தார்கள். பாட்ஷா, காதலன் என தான் நடித்த படங்களில் எல்லாம் முத்திரை பதித்தவர் நக்மா திருமணத்துப் பின்னர் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். அதேபோல் ஜோதிகாவும், சூர்யாவை கல்யாணம் செய்த பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
அதன் பின்னர் பெண்களை மையப்படுத்தி வரும் படங்களில் மட்டும் நடிக்கத் துவங்கினார் ஜோதிகா. 36 வயதினிலே படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தவர், இப்போது அவரது கணவரின் சகோதரர் கார்த்தியோடு சேர்ந்து தம்பி படத்திலும் அசத்தி வருகிறார்.
ஜோவும், நக்மாவும் அக்கா, தங்கைகள் என்பது தமிழகமே தெரிந்த விசயம் தான். ஆனால் இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம். இவர்களது தந்தை சாதர் சாதனா பெரிய தயாரிப்பாளர். இவரின் மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் நக்மா.
இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஜோதிகா. இதில் ஜோதிகாவோடு உடன்பிறந்த சகோதிரி ஒருவர் உள்ளார். அவர்தான் ரோஷினி. இவர்கள் மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.