ஜேர்மனியில் மக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்திய கொடூரன்: வெளியான திடுக்கிடும் தகவல்!

0

ஜேர்மனியில் மக்கள் மீது பயங்கர விபத்தை ஏற்படுத்திய நபர் ஒரு மாதத்திற்கு முன்பே தற்கொலை எண்ணத்தை மனதில் வைத்துள்ளான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Münster பகுதியில் உள்ள Grosser Kiepenkerl bar உணவகத்தில்(திறந்த வெளி உணவகம்) கடந்த சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் அதிவேகமாக வந்த வேன் ஒன்று அங்கிருந்த மக்களை மீது அதிபயங்கரமாக மோதியது.

இதனால் 2 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் Jens Handeln(48) எனவும், ஜெர்மனியைச் சேர்ந்தவரான இவர் மனதளவில் பிரச்சனை இருந்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

மேலும் அவர் குறித்து தகவல்கள் கேட்ட போது பொலிசார் கூற மறுத்துவிட்டனர். இந்நிலையில் உள்ளூர் ஊடகம் ஒன்று அந்நபர் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளது.

48 வயதான Jens Handeln ஒரு தொழில் துறை வடிவமைப்பாளராக (Industrial designer) இருந்துள்ளார். இவர் மீது கடந்த 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் மோசடி வழக்கு மற்றும் மிரட்டல் தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன.

இதன் காரணமாக Muenster மற்றும் Arnsberg நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படாததால் அவை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தொடர்பான குறுந்தகவலை அனுப்பியுள்ளார். ஆனால் எப்படி தற்கொலை செய்யப் போகிறேன், எங்கே என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்த தகவலை அறிந்து பொலிசார் Muenster-ல் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதாகவும், ஆனால் அப்போது அவர் அங்கில்லை எனவும் மற்ற வீடுகளில் தேடிய போதும், அவர் கிடைக்கவில்லை எனவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதனால் தற்போது வரை அவரது வீட்டை சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவரது வீட்டில் ஒரு AK 47 துப்பாக்கி, மற்றும் வெடிமருந்துகளுடன் சில வயர்கள் இணைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்த இரண்டு பேரில் பெண் ஒருவர் எனவும் மற்றொருவர் ஆண் எனவும் தெரிவித்துள்ள பொலிசார் மற்ற தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇது நடந்தால்? எங்கள் வீட்டு மாப்பிள்ளையில் ஆர்யாவுக்கு திருமணம் நடக்காது! நிகழ்ச்சி இயக்குனர் உறுதி!
Next articleஆங்கில பத்திரிக்கைக்காக படு கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை!