சோகத்திற்கு காரணம் என்ன? திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

0

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகாகுலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கும் ரோகிணி(25) என்ற பெண்ணுக்கும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன், மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து மோகன் வீட்டுக்கு வந்தபோது ரோகிணி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்த மோகன் பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் ரோகிணியின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதனிடையில் ரோகிணியின் சகோதரர் கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் மோகன், ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரோகிணி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களிடம் கூறினார், ஆனால் நாங்கள் தான் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தோம். ரோகிணி தற்கொலைக்கு காரணமான மோகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதியவர் செய்த செயல்! ஓடும் ரயிலில் இருந்து தடுமாறி விழுந்த இளம்பெண்!
Next articleநான் முதலமைச்சர் ஆனால்! தர்மம், நியாயம் ஜெயிக்கும்! . நடிகர் விஜய் ஏன் இப்படி பேசினார் தெரியுமா?