சொந்த பிள்ளைகளே அம்மாவை கொன்று ரத்தத்தில் குளித்த கொடூரம்: பகீர் காரணம்!

0

பெரூ நாட்டில் 3 சகோதரர்கள் ஒன்றிணைந்து தள்ளாத வயது தாயாரை கொன்று அவரது கண்களை பிழுது உள்ளுறுப்புகளை வெட்டி நீக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரூ நாட்டில் உள்ள மலையோர கிராமமான Andabamba பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் குடியிருக்கும் 75 வயது Teodora என்பவரது உடலை பொலிசார் கைப்பற்றிய நிலையில், ஒரு அசரீரி எங்களை இந்தச் சடங்குகளை மேற்கொள்ள வைத்ததாக அவரது 3 பிள்ளைகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த பெண்மணியின் மூன்றாவது பிள்ளையே இந்த கொடூர சடங்கை முன்னின்று நடத்தியவர் என்ற பகீர் தகவலும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

தமது கனவில் தோன்றிய கடவுள் தமது தாயாரை பலியிட கோரியதாகவும், அந்த கனவை தமது சகோதரர்களிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்ததாகவும் அவர் பொலிஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

தற்போது கைதாகியுள்ள Aurelia Quispe(38), Percy Quispe(41) மற்றும் Marcelina Suane(46) ஆகிய மூவரும் தங்களது குற்றத்தை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சாத்தானுக்கு தாயாரை பலியிட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என கனவில் ஒரு ஒலி கேட்டதாகவும், அதனால் மூவரும் இணைந்து சனிக்கிழமை இரவு குறித்த சடங்கை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சடங்கின் ஒருபகுதியாக குறித்த தாயாரின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்ததாகவும், உள்ளுறுப்புகளையும் அதுபோன்று வெட்டி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் உடலை புதைக்க எடுத்துச் சென்றுள்ளனர். மட்டுமின்றி தாயாரின் ரத்தத்தில் மூன்று பேரும் குளித்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நரபலி சம்பவங்கள் அப்பகுதியில் வாடிக்கை எனவும், பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி அல்லது தீராத நோய்களுக்காக இதுபோன்ற கொடூர சடங்குகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது சொந்த தாயாரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதான வழக்கு நிரூபணமானால் ஆயுள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்! வழக்கில் திடீர் திருப்பம்!
Next articleஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு? மேஷம் முதல் கன்னி வரை!