சேப்பங்கிழங்கு இலை கீரையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்! இந்த 5 நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது!

0

தாரா (கொலாசியா எஸ்குலென்டா) என்ற தாவரம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் இந்தியாவில் பரவலாக வளரும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இது தமிழில் சேப்பங்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் இலைகள் மற்றும் கிழங்கு உண்பதற்கு பயன்படுகிறது. மேலும் இதில் உடல் நலத்திற்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.

இலைகளின் அமைப்பு இதன் இலைகள் பார்ப்பதற்கு இதய வடிவில் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். இந்த இலைகளை சமைத்து சாப்பிடும் போது கீரை சுவையுடன் இருக்கும். ருசியான இந்த கீரையை நீங்கள் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து அளவுகள் 100 கிராம் சேப்பங்கிழங்கு இலையில்

85.66 கிராம்- தண்ணீர்

42 கிலோ கிராம் – கலோரிகள்

4.98 கிராம் – புரோட்டீன்

0.74 கிராம் – லிப்பிட்

6.70 கிராம் – கார்போஹைட்ரேட்

3.7 கிராம் – நார்ச்சத்து

3.0 1 கிராம் – சர்க்கரை சத்து

107 மில்லி கிராம் – கால்சியம்

2.25 மில்லி கிராம் – இரும்புச் சத்து

45 மில்லி கிராம் – மக்னீசியம்

60 மில்லி கிராம் – பாஸ்பரஸ்

648 மில்லி கிராம் – பொட்டாசியம்

3 மில்லி கிராம் – சோடியம்

0.41 மில்லி கிராம் – ஜிங்க்

52.0 மில்லி கிராம் – விட்டமின் சி

0.209 மில்லி கிராம் – தயமின்

0.456 மில்லி கிராம் – ரிபோப்ளவின்

1.513 மில்லி கிராம் – நியசின்

0.146 மில்லி கிராம் – விட்டமின் பி6

126 மைக்ரோ கிராம் – போலேட்

4825 மைக்ரோ – விட்டமின் ஏ

2.02 மில்லி கிராம் – விட்டமின் ஈ

108.6 மைக்ரோ கிராம் – விட்டமின் கே

புற்றுநோயை தடுத்தல்
இந்த சேப்பங்கிழங்கு இலையில், விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன. எனவே இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும் குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க இது உதவுகிறது.

கண் ஆரோக்கியம்
இந்த இலைகளில் நிறைய விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு நல்லது. நல்ல பார்வை, வயதாகுவதால் ஏற்படும் கண் புரை போன்றவற்றை சரியாக்குகிறது. நல்ல தெளிவான பார்வையை கொடுத்து கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
இதிலுள்ள சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட் மற்றும் ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் நமக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த இலைகளின் சாற்றைக் கொண்டு எலிகளில் ஆராய்ச்சி செய்த போது அதன் ஆண்டிஹைர்பெர்ட்டென்சியஸ் மற்றும் கடுமையான டையூரிக் தன்மை எலிகளின் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் பக்கவாதம், மூளையில் இரத்த குழாயை பாதிப்படையச் செய்தல், மூளைக்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுத்தல், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த சேப்பங்கிழங்கு இலைகளை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
இதிலுள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு செல்களான டி செல்கள், போகோசைட் போன்றவை வேலை செய்ய விட்டமின் சி அவசியம். உங்கள் உடலில் விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.

அழற்சியை குறைத்தல்
இந்த இலைகளில் பினால்ஸ், டேனின்ஸ், ப்ளோனாய்டுகள், க்ளைக்கோசைடு, ஸ்டெரோல், ட்டைட்டர்பினாய்ட்ஸ் போன்ற அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இது நாள்பட்ட அழற்சியை கூட போக்க வல்லது. அழற்சியை தோற்றுவிக்கும் ஹிஸ்டமைன், செரோடோனின் போன்றவற்றை ஆரம்பத்திலேயே குறைத்து விடுகிறது. இதனால் அழற்சி தீவிரமாகுவதை தடுக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா! மகிழ்விக்கும் மோகினியின் ரகசியங்கள்!
Next articleநீல நிறமாக மாறியிருந்த ராணியின் கை! பெரும் கவலையில் இணையதளவாசிகள்!