வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

0

ஐப்பசி மாதத்தில் குபேர எந்திரத்தினை பயன்படுத்தி செய்யும் வழிபாடு வீட்டில் செல்வ வளத்தினை பெருக செய்யும்.

இந்த படத்தில் உள்ள குபேர யந்திரத்தை போல பூஜை அறையில் அரிசி மாவினால் வரைந்து கொள்ளவேண்டும்.

வடக்கு திசை பார்த்து குபேர படத்தினை வைத்து இப்பூஜையினை செய்வது இன்னும் சிறப்பு.

குபேர மந்திரம்:

ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்

ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்

க்லீம் விட்டேஸ்வராய நமஹ

ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ரூபாய் நாணயத்தினை வைத்து அதில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களை வைத்து, சுத்தமான நெய்யினை ஊற்றி விளக்கேற்றி இந்த குபேர மந்திரத்தினை 11 முறை கூறி வழிபட வேண்டும்.

பின், விளக்கு அணைந்ததும் இந்த நாணயங்களை எடுத்து வைத்து விட்டு மறுநாள் பூஜையில் உபயோகிக்கலாம். இதே போல் ஐப்பசி மாதம் முழுதும் வழிபாடு நடத்தினால் செல்வம் பெருகும்.

ஐப்பசி மாதம் முடிந்த பின்னர், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இப்பூஜையினை செய்தால், குபேரர் நம்முடன் இருந்து செல்வத்தினை வாரி வழங்குவார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதை தேய்த்த 2 நிமிடங்களில் தேவையில்லாத முடி அனைத்தும் உதிர்ந்து விடுகிறது!
Next articleபுனிதத்தலங்களில் இரவில் குளிக்கலாமா?