சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

0

சிதம்பரம் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருத முத்து மகன் பழனிச்சாமி (34). கட்டிடத் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஏப்.11-ம் தேதி புவனகிரியை அடுத்த தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு கட்டிடத் தொழிலாளியிடம் வேலை கேட்டு சென்றுள்ளார். இரவு நேர மானதால், வேலைக் கேட்டு சென்றவர் வீட்டின் வெளிப்பகுதி யில் படுத்து உறங்கியுள்ளார்.

விடிந்ததும், வீட்டில் இருந்த பெண் தனது இரண்டரை வயது மகளை தேடியபோது, அவர் மாயமாகியிருப்பது தெரியவந்தது. வீட்டின் வெளியே படுத்திருந்த பழனிச்சாமியையும் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அருகிலுள்ள அரும்புத் தோட்டத் தில் சிறுமியின் அலறல்சத்தம் கேட்டது. சிறுமி, பழனிச்சாமி யால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சிய டைந்த குடும்பத்தினர், சிறுமியை மீட்டதோடு, பழனிச்சாமியை பிடித்து சிதம்பரம் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். பழனிச்சாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது. அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயி ரம் அபராதமும், மற்றொரு பிரி வின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத் தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப் பளித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதோல் சுருக்கம் மற்றும் கருமை மறைய கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணுங்க!
Next articleகட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு