விலாவில் பயங்கர வலியோடு கிராமத்துக் கிழவர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். ஸ்கேன் பார்த்ததில் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் கற்கள் இருப்பது தெரிந்தது. சிகிச்சை கொடுத்தேன். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது மனைவியோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக புகார் வந்தது. விசாரித்தேன். “எனக்குக் கல்லு வந்ததுக்குக் காரணமே என் பொண்டாட்டிதான், டாக்டர்… அவிச்ச இட்லியிலே கல்லு. வடிச்ச சாதத்துலே கல்லு. வீட்டில் ஆக்கிப்போடுவதெல்லாமே கல்லுதான்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: