சிம்மம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
உயர்ந்த எண்ணங்களுடன், பிறர் மெச்சும் படியாக வாழக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டின் முற்பாதி வரை குரு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் லாபங்கள் எதிலும் சிறப்பாக அமையும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைப்பது நல்லது.

ஆண்டின் முற்பாதியில் உங்கள் வாழ்வில் சிறுசிறு நெருக்கடிகள் குழப்பங்கள் நிலவினாலும் திருக்கணிதப்படி குரு வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களாலும் ஒரு சிலருக்கு ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பல புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர் பதவிகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். திருக்கணிதப்படி தை மாதம் 10-ஆம் தேதி 24-01-2020 ஏற்படவுள்ள சனிமாற்றத்தின் மூலம் சனி ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக்குப் பின் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் ஓரளவு மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்ப பொருளாதார நிலை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.

தொழில் வியாபாரம்
ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் பிற்பாதியில் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பிற்பாதியில் மிகச் சிறப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகளும் தீர்வடையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பு பெருகும்.

அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும். மேடை பேச்சுக்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.

பெண்கள்
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மாணவ- மாணவிகள்
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை நிலவினாலும் திறம்பட சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர் கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

மாதப்பலன்

சித்திரை
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு பாதிப்பு, கை, கால் அசதி உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.

வைகாசி
உங்கள் ராசியாதிபதி சூரியன் 10-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய், ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரகூடிய சம்பவங்கள் நடைபெறும். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் கிட்டும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவதும், அஷ்டலட்சுமியை வழிபடுவதும் சிறப்பு.

ஆனி
உங்கள் ராசியாதிபதி சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் யாவும் குறையும். குரு 4-ல் இருப்பதால் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிட்டும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபாடு செய்வதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நற்பலனை தரும்.

ஆடி
ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகளை வகிப்பீர்கள். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். குரு சுக ஸ்தானமான 4-ல் இருப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மேலதிகாரிகளிடம் பேசும் போது மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. புத்திர வழியில் நிம்மதி குறைவு உண்டாகும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி
ஜென்ம ராசியில் சுக்கிரனும், 11-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து லாபங்களைப் பெறுவீர்கள். பயணங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நற்பலனைத் தரும். முருக வழிபாடு செய்வது நல்லது.

புரட்டாசி
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் சிவனையும் வழிபடவும்.

ஐப்பசி
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக நிலவிய தடைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் ஏற்படும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உண்டாகும். முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

கார்த்திகை
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் புதன், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள், செய்யும் தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் கிடைக்கும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

மார்கழி
உங்கள் ராசியாதிபதி சூரியன்- குரு சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொட்டதெல்லாம் துலங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தை
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், ராசியாதிபதி சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெறும். விநாயகரையும் முருகரையும் வழிபாடு செய்வது நல்லது.

மாசி
ராசிக்கு 5-ல் குரு, 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியாக மேன்மை உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

பங்குனி
உங்கள் ராசிக்கு 5-ல் குரு 11-ல் ராகு சஞ்சரிப்பது அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலங்களை அடைவீர்கள். ராசியாதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரநிலை உயரும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9
நிறம் – வெள்ளை, சிவப்பு
கிழமை – ஞாயிறு, திங்கள்
கல் – மாணிக்கம்
திசை – கிழக்கு
தெய்வம் – சிவன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடகம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 10.04.2019 Today Rasipalan !