சினை‌ப்பை‌யில் நீர் கோர்த்து ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் ஏ‌ற்படு‌ம் நோய்!

0

பு‌திது பு‌திதாக மரு‌ந்துக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்தாலு‌ம், அத‌ற்கே‌ற்ற வகை‌யி‌ல் நோ‌ய்களு‌ம் உருவா‌கி‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. த‌ற்போது இருபது முதல் முப்பது வயதுக்குள் இருக்கும் பெண்களில் 5 முதல் 15 சதவீதம் பேருக்கு, பாலிஸிஸ்டிக் ஓவரியன் நோய் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த நோ‌ய் ‌சினை‌ப்பை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒரு ‌வித நோயாகு‌ம். இதனால் சினைப்பையில் நீர் கோர்த்து ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் இருக்கும். இ‌ந்த நோ‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள், பெரு‌ம்பாலு‌ம் ந‌ம்மா‌ல் இது நோ‌யி‌ன் அ‌றிகு‌றி‌க‌ள் எ‌ன்று அ‌றிய முடியாத அள‌வி‌ற்கு இரு‌க்கு‌ம். அதாவது, இ‌ந்த நோ‌யி‌ன் காரணமாக முகத்தில் பருக்கள் ஏ‌ற்படுவது, உட‌லி‌ல் ரோம‌ங்க‌ள் அ‌திக‌ப்படியாக வள‌ர்வது போ‌ன்றவை ஏ‌ற்படலா‌ம்.‌சில பெ‌ண்களு‌க்கு ‌திடீரென உடல் எடை அதிகரித்து, மாதவிலக்கு ஒழுங்கற்று போய்விடும். பொதுவாக இ‌ந்த ‌பிர‌ச்‌சினையா‌ல் மலட்டுத் தன்மையும் ஏற்பட வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ளது.

உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. திருமணமான பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல் தோன்றும்.

விளைவுகள்: கர்ப்பத்தின் துவக்கத்திலேயே, குறைந்தபட்சம் மூன்று முறையாவது, கரு தங்காமல் கலைந்துவிடும்.

கர்ப்பகால சர்க்கரை நோய்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு வகை சர்க்கரை நோய். இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. குழந்தை பிறந்த பின், இந்த நோய் மறைந்து விடும். ஒரு சிலருக்கு தொடர வாய்ப்புள்ளது.

ரத்த அழுத்தம் அதிகரிப்பு: தாயின், 20வது வார கர்ப்பகாலத்தில் திடீரென ரத்த அழுத்தம் உயர்வதால், தாயின் சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் மூளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

சிசேரியன் பிரசவம்: பி.சி.ஓ.எஸ்., உள்ள கர்ப்பிணிக்கு இயற்கையான பிரசவம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு முன், ஒழுங்கற்ற மாதவிடாய், முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனே ஒரு நல்ல டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

பரிசோதனை செய்து, பி.சி.ஓ.எஸ்., இருப்பது உறுதியானால், உடனே சிகிச்சையை துவங்க வேண்டும். ஒரு சிலருக்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு மூலம் சரியாகிவிடும்.

ஒரு சிலருக்கு மாத்திரைகள் மூலமும், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என்றால், ஓவரிகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஒமேகா-3 கொழுப்புள்ள உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யோகா மற்றும் பிராணாயாமமும் நோயை குணமாக்கும்.

உடற்பயிற்சி மற்றும் உணவு: முறையான உணவுப் பழக்கம், தவறாத உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியால் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். இன்சுலின் மற்றும் ஆன்ட்ரஜன் அளவைக் குறைக்கும் பாலீஷ் செய்யப்பட்ட கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இறைச்சி, கொட்டைகள், தானியங்கள், உலர் விதைகள், முட்டை, சீஸ், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, பச்சை கீரைகள், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்பலப்படுத்தும் வைத்தியர்! சிங்களத்தால் களமிறக்கப்பட்ட தமிழினத் துரோகி!
Next articleஅனைவரையும் வியக்க வைக்கும் செயற்பாடு! இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா?