சகோதரனின் சடலத்தை வீட்டிற்குள் எடுத்துச் சென்ற மகிந்த!

0

காலஞ்சென்ற சந்திரா டியூடர் ராஜபக்சவின் உடல் இன்று காலை தங்காலை ஜயசிறி மலர்சாலையில் இருந்து ராஜபக்சவினரின் குடும்ப இல்லமான மெதமுலன இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை வீட்டிற்குள் எடுத்துச் சென்றனர்.

சந்திரா ராஜபக்சவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் உட்பட பலர் மெதமுலன வீட்டுக்கு சென்றுள்ளனர்.

சந்திரா ராஜபக்சவின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 25ஆம் திகதி 2 மணிக்கு குடும்ப மயானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திரா டியூடர் ராஜபக்ச நேற்று மதியம் தங்காலை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article22.08.2018 இன்றைய ராசிப்பலன் புதன்கிழமை ஆவணி 06 !
Next articleயாழில் நடந்த பயங்கரம்! கர்ப்பிணி பெண் மீது கொலைவெறித் தாக்குதல்!