தெற்காசியாவின் மிகவும் உயர்ந்த கட்டடமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அழகாக காட்சியளித்துள்ளது.
நிர்மாணப் பணிகளை நிறைவு பகுதியை எட்டி வரும் நிலையில், நேற்றிரவு பல வர்ணங்களில் தாமரை கோபுரம் காட்சியளித்துள்ளது.
கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
பல வர்ணங்களில் ஒளிர்ந்த தாமரை கோபுரம் ஆயிரக்கணக்கான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
நேற்றையதினம் கொழும்பின் பல பகுதிகளில் கடும் காற்று வீசிய போதும், உயரமான கோபுரத்தின் அழகு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: