என்னை கொன்றுவிட்டார்கள்: மனைவியிடம் ஆவியாக வந்து கூறிய கணவன்… திடுக்கிடும் சம்பவம்!

0

இந்தியாவில் உயிரிழந்த கணவன் ஆவியாக வந்து மனைவியிடம் தன்னை கொன்றவர்கள் குறித்து கூறியதாக தெரியவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் படபலியா கிராமத்தை சேர்ந்த சுபோத் நாயக் என்பவர் கடந்த வாரம் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக முடிவெடுத்த குடும்பத்தார் நாயக்கின் இறுதி சடங்கை செய்தார்கள்.

இந்நிலையில் ஒருவாரம் கழித்து நாயக்கை அதே கிராமத்தை சேர்ந்த தபந்தாஸ் மற்றும் அவர் குடும்பத்தார் கொலை செய்துவிட்டதாக நாயக்கின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், நாயக்கின் மனைவியிடம் இறந்து போன அவர் கணவர் நாயக் ஆவியாக வந்து பேசி தான் கொல்லப்பட்ட விபரத்தை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசித்திர புகாரை கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த பொலிசார் அறிவியல் குழு உதவியுடன் தங்கள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

விசாரணைக்கு பின்னரே இது குறித்த உண்மை தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழும்பு வாழ் மக்களை வியப்பில் ஆழ்த்திய தாமரை கோபுரம்!
Next articleதினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!