கைரேகை இப்படி இருபவர்களுக்கு இரண்டாவது திருமணம் கண்டிப்பாக நடக்குமாம்! உங்களுக்கு எப்படி !

0

வாழ்க்கையில் திருமணம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

திருப்புமுனையாக இருக்கும் திருமணம் அனைவருக்கும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான திருப்புமுனையாக இங்கே பலபேருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

அனைவருக்குமே முதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்.

ஆனால் அது சரியாக அமையவில்லை என்றாலோ அல்லது தோல்வியில் முடிந்தாலோ மறுமணம் செய்து கொள்வதில் எந்த தப்பும் இல்லை.

உங்கள் கைரேகையை பார்த்தே உங்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்குமா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம்.

திருமண ரேகை முறிவு
உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் வாழ்க்கையில் மறைமுகமாக பல பிரச்சினைகள் ஏற்பட போவதன் அடையாளமாகும். தம்பதிகள் இருவருக்குள்ளும் கருத்துக்கள் ஒத்துப்போகாது அல்லது தாம்பத்யம் திருப்திகரமானதாக இருக்காது.

இதனால் அடுத்த திருமணத்திற்கு தயாராக நிறைய வாய்ப்புள்ளது.

பல கோடுகள்
உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது அதற்கும் மேலான சிறிய ரேகைகள் இருப்பின் நீங்கள் எதிர்பாலினத்தாரிடம் மிகவும் பிரபலமானவராக இருப்பீர்கள். ஆனால் தெளிவான திருமண ரேகை இல்லாத பட்சத்தில் அது உங்கள் திருமண வாழ்க்கையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

இதய ரேகை
உங்கள் திருமண ரேகை வளைந்து இதய ரேகை நோக்கி போனால் உங்கள் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்காது. உங்கள் வாழ்க்கை பிரிந்து வாழ்வது அல்லது விவகாரத்தில் முடியும். உங்கள் திருமண ரேகை இதய ரேகையையும் தாண்டி ஆயுள் ரேகை நோக்கி சென்றால் உங்கள் திருமண வாழ்க்கையை யாராலும் காப்பாற்ற இயலாது.

இரண்டு கோடுகள்
உங்களுக்கு ஒரே நீளத்திலான இரண்டு திருமண கோடுகள் இருந்து அது சுண்டு விரலுக்கு கீழே இருக்கும் பகுதியையும், இதய கோட்டையும் பிரித்தால் நீங்கள் குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்வீர்கள்.

உங்களின் திருமண வாழ்க்கை எப்போதும் சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். இன்னொரு வகையில் இது உங்களை எதிர்பாலினத்திரிடையே அதிக பிரபலமாக்கும்.

இதனால் திருமணத்திற்கு வெளியேயான உறவுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா? இந்த இரண்டு பொருளையும் தேய்ங்க…!
Next articleசக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள்! எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்? எப்படி தெரியுமா?