டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து இது!

0

ஒருதடவை கோவையில் நான் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணி இருக்கும் எனக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. முன்னரே கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று தெரியவில்லை வலியுடன் தூக்கமின்றி நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன்.

அப்போது எதிர்வீட்டு பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று என்னிடம் விவரம் கேட்டார். என் வேதனையைக் பாட்டியிடம் சொன்னேன். அப்போது பொங்கல் காலம் உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருவி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார் அந்த பாட்டி.

“இந்தா இதக்குடி அரை மணி நேரத்துல சரியாகிடும்” என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது.

மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது.

தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது.

மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று.

முக்கிய குறிப்பு- மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎதைச் சொன்னாலும் அதைச் செய்யும் “நத்தைச் சூரி” இந்த செடியின் வேர் இருக்கும் இடத்தில் அஸ்வர்யம் கிடைக்கும்.
Next articleவிரைவாக முயற்சித்தால் பலன் நிச்சயம்! பானை வயிறையும் கரைக்கும் அற்புத பானம்!