கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே ஒரு பாம்பு ராஜ நாகம் பற்றிய சில தெரியாத உண்மைகள்.

0

கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே ஒரு பாம்பு ராஜ நாகம் பற்றிய சில தெரியாத உண்மைகள்.

மிக கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் அதி கூடிய விசமுடைய கோப்ரா வகை நாகங்கள், பொதுவாக ஆப்ரிக்காவில் தான் அதிகம் வாழ்கிறதாக கூறப்படுகின்ற அதேவேளை, ஆசியாவில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பாக காணப்படும் ராஜநாகம் தமிழகத்தின் ஒருசில பகுதிகளான ராஜ பாளையம், சதுரகிரி மலை, நாகர்கோயில் மற்றும் மாஞ்சோலை காட்டு பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகின்றது.

ராஜ நாகம் பற்றிய சில தெரியாத உண்மைகள்.

தெற்காசிய பாம்பு வகையாக காணப்படுகின்ற ராஜ நாகம் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக காணப்படுவதுடன், இது 18 அடி நீளம் வரை காணப்படுவதுடன், கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்ட ஒரே ஒரு பாம்பு வகையாக உள்ளது.

மேலும், இவ்ராஜ நாகத்தின் ஆயுட்காலம் பொதுவாக 20 ஆண்டுகளாக உள்ளதுடன், இந்த நாகம் மூங்கில் காட்டு பகுதிகளிலேயே அதிகளவில் வாழ்கின்றது.

இந்த ராஜ நாகத்தை ஏனைய பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இதன் விஷத்தன்மை மிகவும் வீரியமானதாக உள்ளது. அது எந்தளவிற்கு வீரியம் கொண்டது எனில் ஒரு மனிதரை கடித்த 60 நொடியில் அவ்விசம் கொன்று விடும்.

இந்த ராஜ நாகம் தனது நீளத்தில் பாதிக்கும் மேல் உயர்த்தி படம் எடுத்து காட்டும் திறன் உடையதாக காணப்படுகின்றதுடன், பாம்புகளில் இவை மட்டுமே தனது இனத்தை சேர்ந்த பிற பாம்புகளை கொன்று தின்னும் கொடிய பழக்கத்தினையும் உடையதாக காணப்படுகின்றது.

தமிழ்நாட்டில் ராஜபாளையம் வன பகுதியில் காணப்படும் ராஜநாகம் பற்றிய ஆய்வில், 20 முதல் 25 அடி நீளமும், 5 முதல் 7 அடி உயரம் படம் எடுக்கும் தன்மையும் கொண்ட ராஜநாகமஉள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா.
Next articleஇரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? யாருக்கு எப்படியான சந்தர்ப்பங்களில் இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது?