குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்

0

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் விலகி பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் சேர்க்கையும், வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை 4, 10-ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரித்த ராகு கேதுவும் வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 3-ல் கேது 9-ல் ராகுவாக சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பே ஆகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் கூட விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு பாராட்டும். குருபார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதோடு மறைமுக எதிர்ப்புகளும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் அவ்வவ்போது தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடுவதால் மனநிம்மதியும் மகிழச்சியும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியமும் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடி வந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் இல்லம் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் சம்பாதிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்ட நாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத்திற்கு உதவும்.

தொழில் வியாபாரம்
புதிய முயற்சிகள் மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகளும் வேலையாட்களும் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை தருவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை பெற முடியும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் வாய்ப்புகள் குவியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலனை பெறுவீர்கள்.

உத்தியோகம்
தங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களும் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தற்போது தடை இருக்காது. உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

அரசியல்
கட்சியில் உங்களுக்கு பெயர் புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினை பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை பெறுவீர்கள். பத்திரிக்கை உங்களின் நற்செயல்களை பாராட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை இருமடங்காகப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசு மூலம் உதவி கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றையும் வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களை பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வீடு மனை, வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவுகள் நினைவாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிப்பார்கள். பணிபுரியும் பெண்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ மாணவியர்
கல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனை பெறுவீர்கள். விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றில் மாநில அளவில் பல வெற்றிகளைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் கேந்திர திரிகோணாதிபதியாகி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரகனான சனியின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 3- ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைப்பதால் வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும்.

கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். எதிர்பார்க்கும் அரசு உதவிகளும் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தால் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரித்தாலும் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தொழிலாளர்கள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளை தட்டி செல்வீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.

சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13-2-2019 வரை சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 4,5,6,7,8 நிறம் – வெள்ளை, பச்சை கிழமை – வெள்ளி, புதன்
கல் – வைரம் திசை – தென் கிழக்கு தெய்வம் – லக்ஷ்மி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் பெண் சட்டத்தரணி ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஏற்பட்டுள்ள நிலை!
Next articleபெண்களை ஐரோப்பாவுக்குள் கடத்திச் சென்ற இலங்கையர் யார்? அம்பலமான தகவல்!