கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

பொதுப்பலன்கள் : தைரிய ஸ்தானமான 3வது ராசியில் இந்தப் பிலவ வருடம் பிறப்பதால் இழுபறியான வேலைகள் முழுமையடையும். பேச்சியே சில காரியங்களை முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கசப்பு உணர்வுகள் விலகும். உறவினர்களால் உண்டான தொல்லைகளும் மறையும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் உண்டாகும். செலவுகளை சமாளிப்பீர்கள். பணப்பை நிரம்பும். உங்களைத் தவறாக நினைத்த நண்பர்கள், மனம் மாறி வலிய வந்து பேசுவர்.

பிள்ளைகள் உங்களுக்குப் பிரியமாக நடந்துகொள்வார்கள். எதையும் அவர்கள் உணரும் வகையில் எடுத்துச் சொல்வீர்கள். புதிய ஆடை-அணிகலன்கள் சேரும். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கோபம் குறையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆவணி மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிரபலங்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால், மன நிறைவு கிட்டும். நல்ல வேலை இல்லையே என்று வருந்தியர்வகளுக்கு புரட்டாசி மாதம் புது வேலை வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிலருக்கு அயல்நாட்டு யோகம் வாய்க்கும். விசா பிரச்னைகள் தீரும். பொது நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் பேச்சைக் கேட்டு அனைவரும் வியப்பர். எதிர் வீட்டுக்காரர்களுடன் இருந்த சண்டை – சச்சரவு விலகும். சுமுகமான நட்புறவு கொள்வீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

ராசியிலும் 12 லும் குரு என்ன பலன்கள் : முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, ஆரோக்கிய பிரச்னைகள் உண்டாகலாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

அதே நேரம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உருவாகும். பணவரவு அதிகரிக்கும். குறிப்பாக கும்ப ராசி கும்ப லக்னக் காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். குருபகவானின் பார்வைகளும் சாதகமாகவே உள்ளது. நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

ராகு-கேது தரும் பலன்கள் எவை : 20.3.2022 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. கேது 10-ல் நிற்பதால் உத்தியோகத்தில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

21.3.2022 முதல் ராகு 3-ல் நுழைவதால் எதிலும் வெற்றியுண்டாகும். புதிய முயற்சிகள் பலிதாகும். வீடு கட்டும் பணி பணப்பற்றாக்குறையினால் பாதியிலேயே நின்றுப் போனதே, இனி வங்கிக் கடன் பெற்று வீட்டை கட்டி முடிப்பீர்கள். கேது 9-ம் வீட்டிற்குள் நுழைவதல இதுவரை உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். உங்களின் பிடிவாத குணத்தை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்வது நல்லது.

விரைய சனி எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது : இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகத் தொடர்வதால் வீண் பழி, பண இழப்பு வந்து போகும். அதே நேரம் சனி பகவான் உங்கள் ராசி அதிபதியாகவும் இருப்பதால் செலவுகளில் பல சுப செலவுகளாகவே இருக்கும் என்பது ஆறுதல். தூக்கம் குறையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து செயல்பட்டால் செயல்களில் கூடுதல் வெற்றியைப் பெற முடியும்.

வியாபாரம் எப்படி இருக்கும் : புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சுமூகமான நிலை காணப்படும். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர். அவர்களது தேவையறிந்து உதவுவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல் – குழப்பம் விலகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெட்ரோல், கெமிக்கல், மூலிகைகள் லாபம் தரும். அயல்நாட்டுப் பொருட்களால் ஆதாயம் உண்டு. அரசின் கெடுபிடி தளரும்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : வேலைப்பளு குறையும். உங்களது கடின உழைப்புக்கு மற்றவர்கள் பாராட்டு பெற்றார்களே அந்த நிலை மாறும். அதிக சலுகை சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். வேற்று நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். நிர்வாகத் திறமை கூடும். மேல் அதிகாரியால் பாராட்டப் பெறுவீர்கள். கணினி துறையினருக்கு கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். கலைஞர்களுக்குப் பரிசு -பாராட்டு – பணமுடிப்பு கிடைக்கும். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் அன்பைப் பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு, தாழ்வு மனப்பான்மை தடைகளை நீக்கி, தன்னம்பிக்கையையும், வசதி வாய்ப்புகளையும் தரும்.

பரிகாரம் என்ன : புட்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனை வெள்ளிக்கிழமைளில் சென்று வணங்குங்கள். அல்லது அருகிலிருக்கும் மாரியம்மன், காளியம்மன் போன்ற தெய்வங்களின் கோயிலுக்கு சென்று எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி புட்டு நிவேதனம் செய்து விநியோகம் செய்து வழிபாடு செய்யுங்கள். வினைகள் யாவும் நீங்கிப் புதிய பலமும் வெற்றியும் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகர ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleமீனம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!