கிளிநொச்சி பெண் கொலையில் சிக்கிய முகாமையாளர்! கர்ப்பத்திற்கும் இவரா காரணம்?? பொலிசார் துருவல்!

0

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிண் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஆணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த கருப்பையா நித்தியகலா (32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும், இறக்கும்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தமையும் தெரிய வந்திருந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று, அந்த பெண்ணின் கைத்தொலைபேசி மலையாளபுரத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

அதற்கு சமீபமாக உள்ள அம்பாள்குளம் கலிங்கு பகுதியில் இருந்து பெண்ணின் மேலாடை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

கைத்தொலைபேசியை தீவிரமாக ஆராய்ந்த பொலிசார், இன்று ஆணொருவரை கைது செய்தனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணுடன், சந்தேகநபர் நெருங்கிய தொடர்பில் இருந்தமையும் தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட பெண் பணியாற்றிய தனியார் பாதுகாப்பு நிறுவன முகாமையாளரே கைதாகியுள்ளார். மலையாளபுரத்தை சேர்ந்தவர் இவர்.

பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமானவர் இவரா என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களைப் பற்றி அறிய வேண்டுமா? உங்களுடைய இடது கையைப் பார்த்தாலே தெரிந்து விடுமே!
Next articleகிளிநொச்சி யுவதி நித்தியகலா படுகொலையில் அதிரடிக் கைதுகள் ஆரம்பம்!