Home Patti Vaithiyam காலையில் எழுந்ததும் நீங்கள் குடிக்கும் இந்த பானம் மார்பக புற்று நோயை தடுக்கும்!

காலையில் எழுந்ததும் நீங்கள் குடிக்கும் இந்த பானம் மார்பக புற்று நோயை தடுக்கும்!

0
561

காலையில் எழுந்ததும் நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்? காஃபி? தேநீர்? அல்லது பால்? இரவு முழுவதும் காலியாக்கப்பட்டு இருக்கும் வயிற்றில் காலையில் நீங்கள் அருந்தும் பானம் மிக முக்கியமானதாகிறது.

நீங்கள் குடிக்கும் மிக முக்கியமான காபி மற்றும் தேநீரில் எது நல்லது என ஆராய்ச்சி கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்தது. அதனைப் பற்றி காண்போம்.

காபி :
காபியிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும். செரடோனின் சுரப்பதை தூண்டும். இதனால் புத்துணர்வுடன் இருக்க முடியும்.

தேநீர் :
நீங்கள் தேநீர் அதுவும் குறிப்பாக க்ரீன் டீ குடிப்பவராக இருந்தால் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதனை வைத்து நடந்த ஆராய்ச்சியில் பல மகிழ்ச்சியான செய்திகள் வெளிவந்தன.

மார்பக புற்று நோயின் வீரியம்!
மார்பக புற்று நோய் இருந்தவர்களுக்கு க்ரீன் டீ தினமும் காலையில் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வந்ததைப் பார்த்து ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் வந்தது.

ஆராய்ச்சி :
சுமார் மாற்றபக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 6 மாதங்களாக க்ரீன் டீ கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களின் ரத்தம் மற்றும் சிறு நீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

முடிவு :
இதில் புற்று நோய் செல்வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் hepatocyte growth factor என்ற பொருள் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் புற்று நோய் பெருகாமல் தடுக்கப்பட்டது.

ப்ரோஸ்டேட் புற்று நோயின் வீரியம் :
அதுபோல் புரோஸ்டேட் புற்று நோய் இருப்பவர்களும் க்ரீன் டீ குடிப்பதால் புற்று நோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது என கலிஃபோனியா பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயை தடுக்கலாம் :
தினமும் காலையில் க்ரீன் டீயை குடித்தால் புற்று நோய் தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Previous articleமருதாணிப் பூக்கள் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்யும்! -அதன் மருத்துவ நன்மைகள்!
Next articleஏன் காலை உணவு தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்!