பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதன் மூலம் பல கலைஞர்கள் உருவாகியுள்ளனர், அதில் ரசிகர்களால் அதிகம் அறியப்படுபவர் நவீன்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நவீன் இன்று மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி தெரிந்து கொண்ட திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதோடு நவீனுடன் தனக்கு நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி அவரையும் கைது செய்துள்ளனர் போலீசார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: