அதிர்ச்சியில் வைத்தியர்கள்! இறந்த பின்னர் கொன்றவனை வெறியுடன் பலிவாங்கிய பாம்பின் தலை! இறுதியில் நடந்த விபரீதம்!

0

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வெட்டப்பட்ட பாம்பின் தலைக்கு உயிர் வந்து இளைஞரை கடித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப் என்ற பெண்ணின் கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது குறித்த இளைஞர் செல்லும் பாதையில் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

அதை பார்த்த அவர் பாம்பின் தலையை வெட்டியுள்ளார். அதை அங்கிருந்து அகற்றி தூக்கிச் சென்றுள்ளர். அப்போது வெட்டிய பாம்பின் தலைக்கு உயிர் வந்து அவரை கொத்தியுள்ளது.

கிளுகிளுப்பை பாம்பின் வி‌ஷம் கடுமையானது. அது அவரது உடலில் வேகமாக பரவியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, அவர் கண் பார்வையை இழந்து விட்டார். உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால், சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், உயிர் பிழைக்க மாட்டார் எனவும் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகலக்கப்போவது யாரு புகழ் நவீன் திடீர் கைது?- அதிர்ச்சியில் ரசிகர்கள், விவகாரமான விஷயம்!
Next articleஆண்களே உஷார்! உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா இதில் கவனமாக இருங்கள்.