கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் விபத்தினால் உயிரிழப்பு!

0

கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் விபத்தினால் உயிரிழப்பு!

கடந்த எட்டாம் திகதி சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் டுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 83 வயதான சின்னத்தம்பி சுந்தரலிங்கம் என்பவரே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார். குறித்த முதியவர் கனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் விபத்து நேர்ந்துள்ளது. வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், துவிச்சக்கரவண்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீதியின் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது பின் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக இவரை மோதி தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிற்பியின் நரகம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sitpiyin Naragam!
Next articleபொதுமக்களுக்கு எச்சரிக்கை! இலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய்!