கணவர் கண்முன்னே பலியான தாய், மகள்: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!

0

தமிழகத்தில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தனது குழந்தையுடன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(35). இவரது மனைவி ஜான்சி(28). இவர்களது மகள்கள் பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3).

கணேசமூர்த்தி தனது மனைவி ஜான்சி மற்றும் மகள் ஹரினியுடன், சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதணி விழாவிற்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது, கடலூர் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே அவர்களது வாகனம் சென்றபோது, பின்னால் வந்த அரசு பேருந்திற்கு வழிவிடுவதற்காக கணேசமூர்த்தி சாலையோரமாக தனது இருசக்கர வாகனத்தை ஒதுக்க முயன்றுள்ளார்.

அச்சமயம் அவர் நிலைதடுமாறியதால், வாகனத்தில் அமர்ந்திருந்த ஜான்சி மற்றும் அவர்களது மகள் ஹரினி இருவரும் சாலையில் விழுந்தனர். எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த பேருந்து அவர்கள் மீது ஏறியது.

இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கணேசமூர்த்தி சாலையோரமாக விழுந்ததால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில், இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த சிதம்பரம் பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை சரி செய்தனர். மேலும், பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு! மானத்தை வாங்கிய நாய்!
Next articleஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்!