கோவை அருகே விவசாயம் செழிக்க வேண்டி தன்னையும் தனது மகளையும் மந்திரவாதியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கணவன் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா – தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி தம்பதியருக்கு 16 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விவசாயியான மணி, விவசாயம் செழிப்பதற்காக மந்திரவாதி ஒருவரைக் கொண்டு பூஜை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மணி என்கிற அந்த மந்திரவாதி, சடங்கின் ஒரு பகுதியாக தன்னையும் தனது 16 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக விவசாயி மணியின் மனைவி பிரியா கூறுகிறார்.
மேலும் தனது கணவர் மணியும் அவரது சகோதரர் துரைசாமியும் இதற்கு உடந்தையாக இருப்பதாவும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டுவதாகவும் பிரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று மந்திரவாதிகளை நம்பி அவர்கள் கூறும் செயல்களை எந்தவித முன் யோசனையும் இல்லாமல் பல நபர்கள் செய்ய முற்படுவது சமீப காலங்களில் அதிகமாகி வருகின்றது.