உடலில் பழுத்து வீங்கி உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டிகள் பழுத்து உடைய!

0

வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில் வெளிப்படும். இந்தத் தருணத்தில் சரியாகப் பசி எடுக்காது.

நீர்க் காய்கறிகள், குளிர்ச்சியான பழங்கள், நீர்மோர், இளநீர் சாப்பிடுதல், தினமும் நன்றாக தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம்.

நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும், வயதானவர்களுக்கு உஷ்ணக் கட்டி வர அதிகம் வாய்ப்பு உண்டு.

இதனை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்

பெரிய வெங்காயத்தை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும், நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்துவிடும்.

பழுத்து வீங்கி, உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டியின் மீது புகையிலையை நன்கு விரித்துப் போட்டு அதில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கட்டி உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறி குணமாகும்.

எருக்கன் இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக செய்து விளக்கெண்ணெயில் குழைத்துப் போட்டால் நாள்பட்ட ரணங்கள் ஆறிச் சுகமாகும்.

பழுத்த அத்தி இலை, ஆல், புங்கன் ஆகிய மரங்களின் பட்டையை நன்கு நசுக்கி, புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்டபுண் மீது தடவினால் விரைவில் குணம் தெரியும்.

வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் சுட்ட அரப்பு தேய்த்து குளித்து விட்டால் உடலில் தோன்றும் நமைச்சல் அகலும், சொறி சிரங்கிற்கும் இது நல்ல மருந்து.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிப்பிலிப் பொடியில் இவ்வளவு மருத்துவ பயனா! இந்த நோய் எல்லாம் பறந்து விடுமாம்!
Next articleகுழந்தை பிறந்த விவகாரத்தில் விதியை மீறிய ஹரி – மேகன் தம்பதி!