உட (லுறவி)ன் போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்? சரி செய்ய என்ன வழி?

0

உட (லுறவி) ன் போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்? சரி செய்ய என்ன வழி?

முதல் காரணமாக இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இது கிருமிகளால் ஏற்படக்கூடும். சுகாதாரமற்ற உள்ளாடைகள், மாதவிலக்கு சமயங்களில் ஈரமான நாப்கினை மாற்றாமல் வெகுநேரம் வைத்திருத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடும்.

இரண்டாவது காரணம் – எண்டோமெட்ரியோஸஸ். அதாவது, உள்சுவர் வெளி வளர்ச்சி. கர்ப்பப்பையின் வெளியே இருக்கக்கூடிய சுவர் போன்ற பகுதி சிலருக்குக் கர்ப்பப்பையின் வெளியே இருக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழி இல்லாமல் அங்கு தேங்கி, வலி ஏற்படுத்தும். எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகளும் இருக்கும். அது மாதவிடாய் முடிந்த பின்னரும் கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடிய பிரச்சனைதான். நல்ல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும். மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக் (ஸி) ல் ஆர்வம் குறைவதோடு பெண் உறுப்பின் பசைத்தன்மைக் குறைந்து இறுக்கமாகிவிடுகிறது. இதனால்தான் உற-வின் போது வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது. மருந்து வகைகள், க்ரீம் போன்றவற்றின் மூலமாக இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும். மருத்துவரை நேரடியாக அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்லது.

துணையுடன் படுக்கையில் குதூகலமாக உட (லுற) வில் ஈடுபடும் போது, பலர் கடுமையான வலியை உணர்வார்கள். அது ஆண்களுக்காட்டும் அல்லது பெண்களுக்காகட்டும், இருவரின் பிறப்புக்களிலும் வலி ஏற்படும். இப்படி வலியை ஒருவர் அனுபவித்தால், வேதனையில் உடலுறவில் ஈடுபடும் ஆசையே போய்விடும்.

எனவே உட (லுற) வில் ஈடுபடும் போது வலி ஏன் ஏற்படுகிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான காரணம் தெரிந்துவிட்டால், மீண்டும் உறவில் ஈடுபடும் போது அந்தரங்க உறுப்பில் வலி ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

பெண்களுக்கு உட (லுற) வில் போது வலியை உணர்வதற்கு, போதிய அளவில் பெண்களின் உண-ர்ச்சி தூண்டப்படாமல், பிறப்புறுப்பில் ஈரப்பசை இல்லாமல் இருப்பது தான் காரணம். ஆகவே உட (லுற) வில் போது வலி ஏற்படாமல் இருக்க, எடுத்த எடுப்பிலேயே பாய்ந்துவிடாமல் சற்று முன் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

பலமுறை உடல் வறட்சி அல்லது தொற்றுக்களினால், பெண்களின் பிறப்புறுப்பு வறட்சியடையும். இந்த நிலையின் போது உட (லுற) வில் ஈடுபட்டால், தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை உணரக்கூடும்.

ஒருவேளை உங்கள் துணைக்கு பாலியல் நோய்களான மேக வெட்டை, ஈரல் அழற்சி, இனப்பெருக்க உறுப்பு மருக்கள் போன்றவை இருப்பின், அதனால் இருவருமே உட (லுற) வில் போது வலியை அனுபவிக்க நேரிடும்.

பெண்களுக்கு இடமகல் கருப்பை என்பது தீவிரமான நிலையாகும். இந்த நிலையில் கருப்பையின் வெளியே ஒரு திசு வளர்ச்சி அடையும். இந்த நிலையுடன் ஒரு பெண் உட (லுற) வில் ஈடுபட்டால், பயங்கரமான வலியை சந்திக்கக்கூடும்.

ஆய்வுகள் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கும், உட (லுற) வில் போது வலி ஏற்படுவதற்கும் தொடர்புள்ளதாக கூறுகின்றன. எரிச்சல் கொண்ட குடல் நோயில் வயிற்று பிடிப்புக்கள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை அடங்கும்.

முக்கியமாக உட (லுற) வில் ஈடுபடும் போது மன அழுத்ததுடன் இருந்தால், அதனால் தசைகள் இறுக்கமடைந்து, உட (லுற) வில் போது கடுமையான வலியை உணரக்கூடும். எனவே ரிலாக்ஸாக இருங்கள்

பப்பாளிப் பழத்தை உண்டுவர கருப்பை துப்புரவாகும். (கருவுற்ற பெண்கள் சாப்பிடக்கூடாது); கண்பார்வை தெளிவடையும்.

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எறிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை, நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு

கீரைத் தண் டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியே பொறியல் செய்தோ சாப்பி டலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தன்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.

பெண்களின் நோய் குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத் தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத் தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.

யார் சாப்பிடக்கூடாது

கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதொட்டாற்சுருங்கி என அழைக்கப்படும் காமவர்த்தினி பற்றி நீங்கள் அறிந்திராத ஓர் உண்மை! சுவாரஸ்யம்!
Next articleஇரத்த உறவுகள் மற்றும் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்! காரணம் என்ன தெரியுமா?