கடுமையான மாதவிடாய் வலியா! உடனே இதை சாப்பிடுங்கள்!

0

மாதவிடாயின் போது உண்டாகும் கடுமையான வயிற்று வலி மெனாரோயா என்று கூறுவார்கள்.

இது கருப்பை தசைகள் சுருங்குவதால், அந்த பகுதியில் உள்ள ரத்தக் குழாய் செல்களுக்கு ஆக்ஸிஜன் தடைபடும் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணத்தினால் கடுமையான வலி ஏற்படுகிறது.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

ஆளி விதைப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

டார்க் சாக்லேட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பெளலில் வாழைப்பழம், ஆளி விதைப் பொடி, மற்றும் டார்க் சாக்லேட் பவுடர் ஆகிய பொருட்களை தேவையான அளவு எடுத்து கொண்டு அதை நன்றாக கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும்.

இந்த பேஸ்ட்டை மாதவிடாய் காலத்திற்கும் 10 நாட்களுக்கு முன் சாப்பிட தொடங்கி, மாதவிடாய் காலம் முடியும் வரை சாப்பிட வேண்டும்.

மேலும் இதனுடன் தண்ணீர், பழங்கள் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வதுடன், யோகா பயிற்சிகள் போன்றவற்றையும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நன்மைகள்

வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் சத்துக்கள், கருப்பை தசைகளை தளர்வடையச் செய்து, மாதவிடாய் வலியை குறைகிறது.

டார்க் சாக்லேட் பவுடரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கருப்பையில் உள்ள அழற்சியை நீக்க உதவுகிறது.

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கருப்பை தசைகளை தளர்வடையச் செய்து, மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி ஏற்படாமல் தடுக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article209 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறு! அவசரமாக தரையிறக்கம்!
Next articleதினமும் 2 பேரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!