பொருத்தம் பார்க்காம திருமணம் செஞ்சுடாதீங்க!!. திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு நட்சத்திரத்தாருக்கும் ஒரு மிருகம் அடையாளமாக கொடுத்து மறைமுகமாக உதாரணமாக ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள் இந்த பொருத்தம் இல்லை என்றால் ஜோதிடர் யாரும் பொருத்தம் இல்லை என்றுதான் சொல்வார்கள். நட்சத்திரம் எலி என கொடுக்கப்பட்டுள்ளது ரோகிணிக்கு பாம்பு என கொடுக்கப்பட்டுள்ளது இவை ஒன்றுக்கொன்று பகை என்பது தெரிந்ததுதான் எலியை கண்டால் பாம்பு விழுங்கி விடும். எலியின் வாழ்க்கை முறை சிறியது.தன் வீட்டை விட்டு வேறு எங்கும் போக விரும்பாது. அப்படித்தான் இந்த நட்சத்திரக்காரர்களின் குணமும் இருக்கும். அஸ்தம் எருமை கொடுக்கப்பட்டிருக்கும் எப்போதும் எரும சேத்துல கிடக்குற மாதிரி கடுமையான உழைப்பு குறைவு. அதிக தூக்கம் எருமைக்கு புலியை சேர்க்க முடியாது அடிச்சு தின்னுடும்.அது வேகம் அதிகம் இது வேகமே இல்லை.
பாம்பு ரோகிணி பழிக்கு பழி வாங்கும் உயிரினம் இதுவும் தன் வளையை விட்டு எங்கும் போகாது.யாராவது குறிக்கிட்டால் ஆபத்து.இதன் உறவு முறை வித்தியாசமானது. எனவே யாரும் திருப்தி படுத்த முடியாது அதனால் சுகம் எப்போதும் முழுமை அடையாது.பாம்பை கண்டால் நாய் சும்மா விடாது அதனால் நாய் நட்சத்திரங்கள் எதிரி. அதாவது திருவாதிரை.இதே நாய் நட்சத்திறத்துக்கு பூனை நட்சத்திரங்கள் எதிரி. ஆயில்யம். நாயும் பூனையுமா அடிச்சுக்குவாங்க. தாம்பத்யம் சந்தோசம் தராது வாழ்க்கை போர்க்களம் .வேறு துணையையே விரும்புவாங்க.எலிக்கு எலி அமைஞ்சா நல்லதுதான் அதைதான் மகத்து புருசம் பூரத்து பொண்டாட்டி மாதிரினு சொல்வாங்க..
இதையே கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் பொருத்திபார்க்கலாம். புலி விசாகம் இதுக்கு கூட்டாளி எலி வந்தாலும் சரி வாழ்க்கை துணை அமைஞ்சாலும் சரி. ஒத்து வருமா. ஒரே நாளில் பிச்சுக்கிட்டு போயிடும். ஒவ்வொரு மிருகத்தையும் அதன் தாம்பத்யம் முறை தாம்பத்யம் காலம் அதன் மர்ம உறுப்பின் நீளம் ஆழம் என மறைமுகமாக இதில் சொல்லப்பட்ட விசயங்கள் ஏராளம். தாம்பத்யம் நன்றாக அமைந்தால்தான் குடும்ப வண்டி ஓடும்.எனவே யோ–னி பொருத்தம் மிக முக்கியமானது.
உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, அதன் மிருகம் பெண் ஆடு. ஆண் நட்சத்திரம் சதயம், அதன் மிருகம் பெண் குதிரை. இவை இரண்டும் பகை பெறாததால் யோனிப் பொருத்தம் உண்டு.