ஐயோ பாவம்! அண்டா திருடியவருக்கு இப்படி ஒரு தண்டனையா!

0

வீடு புகுந்து அண்டாவை திருடியவனை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

வேலூரில் அருகே தோட்டப்பாளையத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்ற பெண் வீட்டை பூட்டாமல் பக்கத்து வீட்டிற்கு சென்றதை மறைந்திருந்து நோட்டமிட்ட இளைஞன்ஒருவர் வீட்டிற்குள் புகுந்து அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருட முயன்றுள்ளான்.

இந்நிலையில், இதை கண்ட அப்பகுதி மக்கள் திருட முயன்ற அந்த இளைஞனை துரத்தி சென்று மடக்கி பிடித்தயுள்ளனர்.

இதனையடுத்து, அவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய பொலிஸார் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இளைஞனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் கலிஷா என்பதும், சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த திகதியில் பிறந்தவர்கள் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க! வாழ்க்கையில் சோமான நாட்கள் கூட மிகவும் அழகா இருக்கும்!
Next articleஅக்காவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது ஏன்! பொலிசாரிடம் இளம் பெண் அளித்த வாக்குமூலம்!