எலும்பு முறிவுக்கு என்ன முதலுதவியை செய்வது! உடைந்த எலும்பை இயற்கையாக வீட்டிலேயே ஒட்ட வைப்பது எப்படி?

0

விளையாடும்போதும், ஓடும் வாகனத்திலிருந்து கீழே விழும்போதும், உயரத்திலிருந்து தவறி விழும்போதும் இடுப்பு, கை, கால், தொடை மற்றும் தாடை எலும்புகளில் முறிவு ஏற்படுவது வழக்கம். எந்த எலும்பில் முறிவு ஏற்பட்டாலும், அதற்குரிய முதலுதவியை எப்படிச் செய்வது?

‘கடுமையான வலி, பாதிக்கப்பட்ட பகுதியை அசைப்பதில் சிரமம், வீக்கம், ரத்தக் கசிவு, உறுப்பு சிதைந்திருப்பது அல்லது அசாதாரணமாக வளைந்திருப்பது, தோலைக் கிழித்துக்கொண்டு எலும்பு வெளியே நீட்டி நிற்பது போன்றவற்றை அறிகுறிகளாகச் சொல்லலாம். பாதிக்கப்பட்ட கை அல்லது காலில் விரல்கள் மரத்துப்போயும் நீல நிறமாக இருப்பதும் எலும்பு முறிவுக்கான அறிகுறிகள்தான். பொருந்தி இருக்கும் மூட்டில் இருந்து ஓர் எலும்பு விலகுவதும் எலும்புமுறிவைப் போன்றதுதான்.’

அறிகுறிகள் என்ன?

அடிபட்ட நபருக்கு எலும்பு முறிந்துள்ளதா என்று தெரிந்துகொண்ட பின்னரே, முதலுதவியைத் தொடங்க வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் உதவும்:

1. விபத்து ஏற்பட்ட உடல் பகுதியில் வலியும், வீக்கமும் இருக்கும்.

2. அடிபட்ட பகுதியை அசைக்க முடியாது. அசைத்தால் வலி அதிகரிக்கும்.

3. முறிவுள்ள பகுதியைத் தொட்டாலே வலி அதிகரிக்கும்.

4. முறிவு உறுதியானால், அப்பகுதி எலும்புகள் உள்ளுக்குள் உராய்வதை பாதிக்கப்பட்ட நபர் உணர்வார்.

5. முறிவு ஏற்பட்ட பகுதியில் வளைவு அல்லது குழி தோன்றலாம்.

6. முறிவுக்குக் கீழ் உள்ள பகுதி பலமில்லாமல் இருக்கும்.

‘சுளுக்கு ஏற்படும்போது இருக்கும் வலியைவிடப் பன்மடங்கு அதிகமான வலியை, எலும்புமுறிவின்போது உணர முடியும். ஆனாலும், ஒரு மருத்துவராலேயே இரண்டையும் துல்லியமாகப் பிரித்து இனம் காண இயலும்.’

பொதுவான முதலுதவிகள் இவை:

அடிபட்டவரை அந்த இடத்திலிருந்து நகரவிடாதீர்கள்.

அடிபட்ட பாகத்தை அசைக்க விடாதீர்கள்.

அடிபட்டவரைப் படுக்க வையுங்கள்.

காயம் இருந்தால், ஈரத்துணியால் துடைக்கவும்.

ரத்தக்கசிவு இருந்தால், துணியைப் பல மடிப்புகளாக மடித்து, காயத்தின் மீது வைத்து, அழுத்தமாகக் கட்டுப் போடவும்.

கை எலும்பு முறிவுக்கு முதலுதவி:

அதாவது, எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவரை முதலில் சரியான கோணத்தில் படுக்கவைக்க வேண்டும் – இது ரெஸ்ட். அவரது வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் விதமாக ஐஸ் கட்டியைப் பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கலாம். ஐஸை நேரடியாகத் தோல் மீது வைக்காமல் ஒரு துணியில் சுற்றிவைப்பது நல்லது.

அடுத்ததாக கம்ப்ரஷன். மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே உடைந்த இடத்தில் சுத்தமான துணியைக்கொண்டு கட்டு போட வேண்டும்.

உடைந்த எலும்புகள் மீண்டும் விலகிவிடாமல் இருக்க அதைச் சற்றே உயர்வாக வைப்பதை – எலிவேஷன் என்று குறிப்பிடுவோம்.

கை எலும்பு முறிந்திருந்தால், கையின் இரு பக்கங்களிலும் மூங்கில் தப்பைகளை வைத்துத் துணியால் கட்டுப்போடவும். மூங்கில் தப்பைகள் கிடைக்காவிட்டால், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்தும் கட்டுப்போடலாம்.

முறிந்த உறுப்புகள் மேன்மேலும் அசைவதைத் தடுக்க, ஓர் ஆதாரம் தருவதுதான் இந்த முதலுதவியின் நோக்கம்.

அடுத்து,முறிந்த பாகத்தைத் தொங்கப்போடக் கூடாது. ஏனென்றால், தொங்கப்போடும் போது, முறிவுக்குக் கீழே ரத்தம் தேங்கி வீக்கமும் வலியும் அதிகமாகும். இவற்றின் விளைவால், முறிந்த எலும்புகளை நேராக எடுத்துவைத்துக் கட்டுவதில் சிரமம் ஏற்படும்.

இப்போது, அடிபட்டவரின் முழங்கையை ‘L’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

இனி, கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப்போட வேண்டும். இதற்குத் துணி கிடைக்காவிட்டால் சட்டையைப் பயன்படுத்தலாம்.

ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் காயத்தின் மேல் இருக்கும் துணியை வெட்டி எடுக்கலாம். ஆனால், கழுவக் கூடாது; தொடவும் முயற்சிக்க வேண்டாம். எலும்பு முறிவுடன் காயமும் ஏற்பட்டிருந்தால், சுத்தமான துணியால் கட்டுப்போட்டு முதலில் ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். மூச்சு சீராக வருகிறதா என்று பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்த வேண்டும். வேறு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். காயம் பட்ட இடத்தை அசைக்கக் கூடாது. கையில் முறிவு ஏற்பட்டிருந்தால், 90 டிகிரி கோணத்தில் நெஞ்சோடு சேர்த்துக் கையை அசையாமல் வைத்திருக்கச் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் மயங்கி இருந்தாலோ அல்லது மூச்சிரைப்புடன் இருந்தாலோ, தலை, கீழ் நோக்கி இருக்குமாறு மெள்ளப் படுக்கவைக்கலாம். கழுத்தைத் திருப்பக் கூடாது.”

தொட்டில் போலக் கட்டுவது எப்படி?

ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு துணியை வெட்டிக்கொள்ளுங்கள். அதை ஒரு முக்கோண வடிவில் மடக்கிக் கொள்ளுங்கள். முறிவு ஏற்பட்டுள்ள பகுதியை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, முக்கோண பாண்டேஜின் ஒரு முனையை அடிபட்டவரின் மார்புக்கும் முழங்கைக்கும் இடையே கொண்டு செல்லுங்கள்.

முக்கோண பாண்டேஜின் மற்றொரு முனையை முன்னங்கை முன்புறமாகச் சுற்றிக் கொண்டு சென்று, அடிபட்டவரின் கழுத்தைச் சுற்றிப் பின்பக்கமாகக் கொண்டு சென்று, முன்புறமாகக் கொண்டு வாருங்கள்.

இப்போது மார்போடு சேர்ந்திருக்கும் முதல் முனையுடன் இந்த இரண்டாவது முனையை முடிச்சுப் போட்டுவிடுங்கள்.

தொங்கிக் கொண்டிருக்கும் பேண்டேஜின் மீதமுள்ள பகுதியை மடித்து ஒரு ஊக்கு அல்லது குண்டூசி கொண்டு பாதுகாப்பாகக் குத்திக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்வரை இந்தத் தொங்குக் கட்டை கழற்றாதீர்கள்.

நிச்சயமாக! தலையில் சிராய்ப்போ அல்லது காயமோ இருந்தால், அதைக் கவனிக்க வேண்டும். தலையில் குழி இருந்தாலும் கவனிக்கவும். காதுக்குப் பின்புறம் வீக்கம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். நிறமற்ற திரவமோ அல்லது நீர்த்துப்போனதுபோல ரத்தமோ காது அல்லது மூக்கில் வழிவது, கண்ணின் வெண்படலத்தில் ரத்தக் கசிவு, முகம் கோணலாக இருப்பது, எதிர்வினை ஆற்றுவது மெள்ள மெள்ளக் குறைவது போன்றவை தலைக் காயத்தின் வெளிப்பாடுகள். காதில் இருந்து ரத்தம் வழிந்தால், சுத்தமான துணியினால் காதைச் சுற்றிக் கட்டுப்போடலாம். உடனடியாகக் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது மிகவும் முக்கியம்.’

இடுப்பு எலும்பு முறிவுக்கு முதலுதவி:

விபத்தில் மட்டுமல்லாமல், சாதாரணமாக கால் வழுக்கி விழுந்தாலே இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, கீழ்க்கால் எலும்பு மற்றும் பாத எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

இடுப்பு எலும்பு முறிந்திருந்தால், முதலில் அடிபட்டவரைப் படுக்க வையுங்கள். கால்கள் நேராக நீட்டி யிருக்க வேண்டும். ஓர் அகலமான துணியால் இடுப்பைச்சுற்றிக் கட்டுப் போட வேண்டும்.

பிறகு, இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். இந்த இரண்டு கட்டுகளிலும் முடிச்சு, பக்கவாட்டில் இருந்தால் நல்லது.

ஆமாம்! அடிபட்ட இடத்தை மசாஜ் செய்யக் கூடாது. உடைந்த எலும்பை நேராக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. தகுந்த சப்போர்ட் இல்லாமல் உடைந்த எலும்பை அசைக்கக் கூடாது. முறிவான எலும்புக்கு மேலோ கீழோ உள்ள மூட்டுக்களை அசைக்கக் கூடாது. ஆகாரம் எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. முறிந்த எலும்பைப் பழையபடி பொருத்தவோ உள்ளே தள்ளி அமுக்கவோ கூடாது.’

தொடை எலும்பு முறிவுக்கு முதலுதவி:

தொடை எலும்பு முறிந்திருக்குமானால், மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு தொடைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு தொடைகளையும் சேர்த்து மூன்று இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும்.

கீழ்க்கால் முறிவுக்கு முதலுதவி:

இதற்கான முதலுதவி, தொடை எலும்பு முறிவுக்குச் செய்வதைப் போலவேதான் செய்ய வேண்டும். அதாவது, மிருதுவான துணி மடிப்புகளை இரண்டு கால்களுக்கும் நடுவில் வைக்க வேண்டும்.

பிறகு, இரண்டு கால்களையும் சேர்த்து மூன்று அல்லது நான்கு இடங்களில் துணிக்கட்டுப் போட வேண்டும்.

கட்டுகளின் முடிச்சுகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
இடுப்பு, தொடை மற்றும் கால் எலும்பு முறிந்துள்ள நபரை, ‘ஸ்ட்ரெச்சரி’ல் தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஸ்ட்ரெச்சர் கிடைக்காதபோது, ஒரு கனமான போர்வையில் அவரைப் படுக்க வைத்து, போர்வையின் இரு முனைகளை ஆளுக்கு ஒருவராகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

பாதங்களில் எலும்பு முறிவு:

பாதத்தின்மீது கனமான பொருள்கள் விழுதல், வழுக்கிவிழுதல், வாகனங்கள் பாதத்தில் ஏறுதல், உயரமான இடத்திலிருந்து விழுதல், தாண்டிக் குதித்தல் போன்றவற்றால் பாத எலும்புகளில் முறிவு ஏற்படலாம்.

மெத்தென்று துணியை மடித்து, பாதத்தின் கீழே அணைப்புக் கொடுங்கள்.
அந்தத் துணி அணைப்பைச் சேர்த்து ஓர் அகலமான பாண்டேஜ் துணியால் பாதம் முழுவதும் கட்டுப் போடுங்கள்.

பாண்டேஜ் துணியின் முனைகளை ‘8’ போல கணுக்காலின் பின்பக்கமாகக் கொண்டு சென்று, பிறகு முன்பக்கமாகக் கொண்டுவந்து முடிச்சுப் போட வேண்டும்.
முடிச்சு பாதத்தின் மேற்புறம் மத்தியில் வர வேண்டும். எலும்பு முறிந்த பாதத்தைத் தரையில் ஊன்றக் கூடாது.அவரை ‘ஸ்ட்ரெச்சரி’ல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

கீழ்த்தாடை முறிவுக்கு முதலுதவி:

முறிவு ஏற்பட்ட தாடையை உங்கள் கையால் தாங்கிக் கொள்ளுங்கள். துணியை மடித்துத் தாடைக்குக்கீழ் அணைப்புக் கொடுங்கள்.

ஒரு பாண்டேஜ் துணியால் தாடையோடு அழுந்தும்படி கட்டுப்போட்டு,முனைகளைத் தலைக்கு மேலே கொண்டுவந்து உச்சித்தலையில் முடிச்சுப் போடுங்கள். இனி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் கொய்யா!
Next articleபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை!