உள்ளங்கை மென்மையாக மாற வேண்டுமா! அப்போ இப்படி செய்யுங்கள்!
பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டிதான். ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் ‘பட்டுப் போன்ற கைகள்’ ஒரு கட்டத்தில் கரடுமுரடாகிவிடும். சிலருக்கு வெடிப்பு, வறட்சி, அரிப்பு, கோடுகள், தோலுரிவது போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நகம் உடைந்து போவது, நிறம் மாறுவது, புள்ளிகள் தோன்றுவது என நகத்திலும் பாதிப்புகள் வரலாம். உங்கள் ஊட்டச்சத்திலும், கைகளின் பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால், உங்கள் உள்ளங்கையில் மென்மை தங்கும்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை.
கிளிசரின்.
செய்முறை:
சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் குழைத்து உள்ளங்கைகளில் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு.
ஆலிவ் எண்ணெய்.
செய்முறை:
ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கைகளுக்கு தேய்த்து கழுவினால் உள்ளங்கை மிருதுவாக மாறும்.