கருப்பையை சுத்தமாக்கும், வயிற்றுப்புழுக்களைக் அழிக்கும் தன்னை கொண்ட கல்யாண முருங்கை!

0

முழுமையாகவே எண்ணற்ற பயன்களைக் கொண்ட கல்யாண முருங்கையானது முழுத்தாவரம் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் உடையதாகவும் தாவரம் முழுவதும் முட்களைக் கொண்ட, மென்மையான தண்டுக் கட்டையை உடைய மரமாகும். இதன் தண்டு, கட்டை ஆகியன பச்சை நிறமுடையதாகக் காணப்படும் அதேவேளை இதன் இலைகள் அகலமானவையாகவும், பூக்கள் பளிச்சிடும் சிவப்பு நிறமானவையாகவும் விதைகள் உருட்டானசிவப்பு நிறமானவையாகவும் காணப்படுகின்றன.

முருக்கமரம், கல்யாண முருக்கன் மற்றும் முள்முருக்கு எனும் பல்வேறுபட்ட மாற்றுப் பெயர்களைக் கொண்ட இதனை தமிழகமெங்கும் வேலிகளில், பரவலாகக் காண முடிவதுடன், இதன் இலை, விதை, பூ மற்றும் பட்டை என்பன மருத்துவப் பயனுள்ளவையாக காணப்படுகின்றன.

பொதுவாக வயிற்றுப்புழுக்களைக் அழிக்கும் தன்னை கொண்ட கல்யாண முருங்கையின் இலை, சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், தாய்ப்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல் மற்றும் உடல் பலத்தை அதிகரிப்பதுடன், தன் பூக்கள் கருப்பையை சுத்தமாக்கும். மேலும், இதன் பட்டை, கோழையகற்றல், காய்ச்சல் போக்குதல் மற்றும்;; குடற்புழுக்களைக் கொல்லும் தன்மையுடையதாகவும் இதன் விதை, மலமிளக்கும் தன்மையுடையதாகவும் காணப்படுகின்றது.

30 மி.லி. அளவான கல்யாண முருங்கை இலைச்சாற்றினை தினமும் காலையில், வெறும் வயிற்றில் தொடர்ச்சியாக 10 நாட்கள் குடித்து வரும் போது அல்லது இலையிலிருந்து இரசம் தயாரித்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவரும் போது மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி குணமடையும்.

பொதுவாக வெற்றிலை, மிளகு போன்ற கொடிவகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஆதாரமாக இக்கல்யாண முருங்கை மரம் வளர்க்கப்படுகின்றது.

குடற்புழுக்கள் வெளியாக

குழந்தைகளுக்கு:

10 துளி இலைச்சாற்றில் சிறிதளவு வெந்நீர் கலந்து, குடித்து வருதல் வேண்டும்.

பெரியவர்களுக்கு :

4 தேக்கரண்டி இலைச்சாற்றில் சிறிதளவு தேன் கலந்து, குடித்து வருதல் வேண்டும். இதன் போது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மோர் குடித்தல்வேண்டும்.

கல்யாண முருங்கைப் பூ ஒன்றுடன், 4 மிளகு சேர்த்து, அரைத்து வெறும் வயிற்றில், காலையில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரும் போது பெண்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாகும்.

கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிட்டு வரும் போது தாய்மார்களுக்கு பால்சுரப்பு அதிகமாகும்.

கர்ப்ப காலத்தில் கல்யாண முருங்கை இலைகளை அரிந்து, சிறுபயறுடன் சேர்த்து, வேகவைத்து உண்பதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிறுநீர் எரிச்சல் குணமாகி, தாராளமாக சிறுநீர் இறங்கும்.

தேவையான அளவு இலைகளை இலேசாக நசுக்கி, வதக்கி, இளஞ்சூடான நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டும் போது கீல்வாயு குணமடையும்.

ஒரு தேக்கரண்டி அளவுள்ள இலைச்சாறு மற்றும் அதே அளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் காலை, மாலை, மூன்று நாட்களுக்கு குடித்து வரும் போது சீதபேதி குணமடையும்.

பட்டையை நசுக்கி, வெந்நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவிவரும் போது புண்கள் மற்றும் தோல்நோய்கள் குணமடையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமேஷம்! தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்!
Next articleகடுக்காயின் மருத்துவ பயன்கள்!