உங்கள் தொப்பையை குறைக்க அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடவேண்டும் தெரியுமா?

0

பழங்களிலேயே அன்னாசிப்பழம் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்கள் உண்பதால் உடலில் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகின்றது. 

இந்த பழத்தில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நீர்ச்சத்து சர்க்கரைப் பொருட்கள் ,தாது உப்புக்கள் , புரதச்சத்து நார்ச்சத்து , வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.நீா்ச்சத்து 85 சதவீதம் நிறைந்துள்ளது,

மருத்துவகுணம்

அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்பலம் கூடும். உடல் அழகாகும் இதயக் கோளாறு, குணமாகும். பழச்சாறை ஒரு நாள் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி, தொண்டைவலி, தொண்டைப்புண் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும்.

அன்னாசிபழத்திற்கு சிறுநீரகக் கற்களை கரைக்கும் ஆற்றல் உண்டு,மேலும் மஞ்சள் காமாலை, உடல்வலி, இடுப்புவலி சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. உடலுக்கு அழகையும் உள் உறுப்புகளையும் பலப்படுத்தும்.பித்தத்தையும் நீக்கக் கூடியது.

ஜீரணசக்தியை அதிகரிக்கும். மிகுதியாக உணவை உண்டால் ஒரு கப் அன்னாசிப்பழத் துண்டுகளை உண்ண விரைவில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் சொிமானத்தை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் விரைவில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு மருந்து விக்கல், இழுப்பு நோய் தீர அன்னாசி இலையின் சாறுடன் சிறிதளவு சர்க்கரை இட்டு சாப்பிட்டால் நல்ல பலன் தரும். 1 தே.க இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து அருந்தினால் , வயிற்றுப்பூச்சிகள் பேதியாகி வெளியேறிவிடும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழத்தை கொடுத்து வந்தால் பசி ஏற்படும். எலும்பு , உடல் வளர்ச்சி ஏற்படும். அன்னாசிப்பழச்சாறுடன் தேன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உள் உறுப்புகள் பலப்படும். கண் பார்வை திறனை கூட்டும்,

அன்னாசி பழம் பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகின்றது. கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் தாராளமாக உண்ணலாம் தொப்பையை கரைக்கும் அதற்கு அன்னாசிப்பழத்தைச் துண்டுகளாக வெட்டி நான்கு தே.கரண்டி ஓமத்தை பொடியாக்கி அதில் போட்டு ஒருடம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும், அதை மறு நாள் காலையில் சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

அன்னாசிப்பழம் உடல் சூட்டினை ஏற்படுத்தக்கூடியது. அதனால் கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தை உண்ணக்கூடாது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதோல் நோய்கள் மற்றும் உடல் வலிகளைப் போக்கும் வர மிளகாய்!
Next articleஉங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? அதற்கு இதுதான் காரணம்!