இப்படி சாப்பிட்ட உலர் திராட்சை பல நோய்களுக்கு நல்ல பலன் தரும்!

0

உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை விட நட்ஸ் வகைகளில் அதிகமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.சுவைக்காக சேர்க்கும் கிஸ்மிஸ் எனப்படும் உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. தொடர்ந்தும் படியுங்கள் அவற்றின் நன்மைகளை

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தை திடமாக வளரும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் குணமடையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

கிஸ்மிஸ் பழத்தில் அதிகளவிலான பாலிபினாலிக் என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கும். இவை நம் உடலில் கட்டிகள் உருவாகாமல் தடுத்திடும் குறிப்பாக புற்றுநோய்க்கட்டிகள்.

அன்றாட உணவில் இதனை சேர்த்துக் கொண்டால், புற்றுநோய்க்கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

வயதாவதால் ஏற்படும் கண்பிரச்சனைகளுக்கு கிஸ்மிஸ் பழம் நல்ல தீர்வாய் அமைந்திடும். இதில் பீட்டா கரோட்டின்,விட்டமின் ஏ மற்றும் கரோடினாய்ட் போன்ற சத்துக்கள் இருப்பதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

இந்த உலர் திராட்சையில் ஃபைடோகெமிக்கல் சத்து பற்சொத்தை ஏற்படாமல் தடுத்திடும். பற்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு சிறந்த மருந்தாகவும் இது செயல்படும். இதில் இருக்கும் கால்சியம் சத்து, பற்களின் எனாமலை பாதுகாத்திடும்.

இயற்கையாகவே இதில் சர்க்கரை ஃபுருக்டோஸ், குலுக்கோஸ் போன்றவை இருப்பதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமலேயே உடல் எடையை அதிகரிக்க முடியும்.

இதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்திடும். அதே போல நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடுவதால் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

சருமத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கிடும் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கச் செய்திடும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபர்ஃப்யூம் உங்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் என தெரியுமா?
Next articleஆண் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம் இதுதாங்க!