நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம், மயக்கம், வாந்தி தீர இப்படி செய்து பாருங்க!

0

* எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

* மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை போன்றவற்றுக்கு உகந்தது எலுமிச்சைச் சாறு.

* எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் மறையும். எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது பால் ஏடு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளிச்சிடும்.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகிவர உடல் எடை குறையும். இதையே இரவில் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். மனம் அமைதி அடையும்.

* தலையில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். பித்தம், உடல் சூடு அடங்கும்.

* எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவந்தால் வறட்டு இருமல் தீரும்.

* மருதாணியை அரைத்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து பாதத்தில் தடவிவந்தால் பாத எரிச்சல் குணமாகும்.

* எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம், கிருமிகளை அழிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? இதை சாப்பிட்டு வாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்!
Next articleசிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, கலந்து குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!