எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியரை நாடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேலும் காய்ச்சல் வந்தால் தொழில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 பேர் பலியாகினர்.
அத்துடன் 38,565 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: