இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளதால், அவர்களுக்கு உதவ சீனா நிதியுதவி அளித்துள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் ஹோட்டல் மற்றும் தேவாலயங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
China has made a cash donation of USD 100,000 for the treatment of the injured in the Easter Sunday bomb Attacks in Sri Lanka – Chinese Embassy Colombo @SLRedCross #LKA #SriLanka #EasterSundayAttacksLK pic.twitter.com/yi5LLk7xnq
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) May 9, 2019
இந்நிலையில் ஈஸ்டர் தினத்தன்றுநடந்த தாக்குதலால் காயமடைந்தவர்களுளின் சிகிச்சைக்காக உதவ சீனா நிதியுதவி அளித்துள்ளது. அதன் படி 100,000 அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 1,75,48,000 கோடி ரூபாய்) கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.