இன்றைய ராசிபலன் 5.7.2018 வியாழக்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 5.7.2018 வியாழக்கிழமை !

5.7.2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 21-ம் நாள்.
தேய்பிறை சப்தமி திதி இரவு 9.09 வரை பிறகு அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 3.35 வரை பிறகு ரேவதி. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
பரிகாரம்: தைலம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.

மேஷம் : சுமை
ரிஷபம் : பாராட்டு
மிதுனம் : நலன்
கடகம் : அத்தியாயம்
சிம்மம் : அனுபவம்
கன்னி : முன்னேற்றம்
துலாம் : ஆன்மீகம்
விருச்சிகம் : சிந்தனை
தனுசு : மதிப்பு
மகரம் : வெற்றி
கும்பம் : உதவி
மீனம் : கவலை

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரை தருவார். சாதிக்கும் நாள்.

மிதுனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்க ளால் மற்றவர்கள் பயனடை வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

கன்னி: உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். உங்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழையஉறவினர்கள் வீடு தேடிவருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். வெற்றி பெறும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் அமர்ந்திருப்பதால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலை வலுவாக்கும் தினை அரிசியின் பயன்கள் !!
Next articleகொரோனா போன்ற நோய்க்கிருமி அச்சமா? எலுமிச்சை பழத்தை அறுத்து படுக்கையறை மூலைகளில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!