இன்றைய ராசிபலன் 15.4.2018!

0

இன்றைய ராசிபலன் 15.4.2018

15.4.2018 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 2-ம் நாள்.
தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 8.32 வரை பிறகு அமாவாசை. ரேவதி நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 4.22 வரை பிறகு அஸ்வினி. யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.22 வரை அதன் பிறகு சித்தயோகம்.
குளிகை: 3:00 – 4:30
சூலம்: மேற்கு.
பொது: திருசிராமலை சிவபெருமான் கற்பக ரிஷப வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11.
எமகண்டம் மதியம் மணி 12.00-1.00.
இராகு காலம் மாலை மணி 4.30-6.00.

மேஷம் : அலைக்கழிப்பு
ரிஷபம் : ஆசை
மிதுனம் : வருமானம்
கடகம் : சிந்தனை
சிம்மம் : தயக்கம்
கன்னி : நிகழ்வு
துலாம் : வெற்றி
விருச்சிகம் : மகிழ்ச்சி
தனுசு : சந்திப்பு
மகரம் : அறிமுகம்
கும்பம் : திறமை
மீனம் : சண்டை

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பி றந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிற ந்தவர்கள் உறுதுணையாக இருப்பா ர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை வரும் வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்து!
Next article2018-அட்சய திருதியை நாளின் ரகசியம்! செய்ய வேண்டியது! செய்ய கூடாதது என்ன ?