இந்த மூனுல உங்க பாதம் எப்படினு சொல்லுங்க! நீங்க எப்படினு நாங்க சொல்றோம்!

0

நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை வைத்து தான் உங்கள் மதிப்பு அறியப்படும். நீங்கள் விட்டுச் செல்லும் பாதச்சுவடுகள் உங்கள் குணநலன்களைப் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் குணநலனை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் யார், என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படி ஒரு வேலையை செய்கிறீர்கள் என்பதை எல்லாவறையும் கணிக்க முடியும்.

குணநலன்கள்
ஒரு தனி நபராக உங்கள் எண்ணம், மனப்பான்மை மற்றும் குணத்தையும் பொறுத்து இது அமைகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையப் போவதை தீர்மானிப்பது அடிப்படையில் உங்கள் குணநலம் மட்டும் தான் . உங்கள் விருப்பங்கள் மற்றும் அவற்றை நீங்கள் எப்படி தீர்மானிக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் மரபு நிர்ணயிக்கப்படுகிறது. உங்களுடைய பாதச்சுவடுகள் உங்களுடைய குணநலன்களைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன, எனவே உங்களுக்காக முன்னேறுவதற்கான வழியை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

இவற்றில் உங்களின் பாதச்சுவடு என்ன?
கீழ்க்கண்ட மூன்று வகையான பாதச்சுவடுகளில் உங்களுடைய பாதச்சுவடு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர். உங்களுடைய குணநலன்கள் என்னென்ன என்று நாங்கள் சொல்கிறோம்.

முதல் வகை
இது தான் உங்கள் பாதச்சுவடு என்றால் நீங்கள் இயற்கையாக ஒரு கூலான அடக்கமான ஒரு மனிதர். எளிதில் பயம் கொள்ளும் ஒரு மனிதர் அல்ல நீங்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டீர்கள். எந்த ஒரு செயலுக்கும், காலம் கனியும் வரை காத்திருக்கும் ஒரு பொறுமைசாலி நீங்கள். நீங்கள் சிறந்த வாய்ப்பைக் காணும் வரை அதிக நேரம் செலவிடுவீர்கள். இதனால் தான் அதிக லாபமும் அடைவீர்கள். உங்களை நோக்கி எதிர்வரும் வாய்ப்புகளை அடையாளம் காணும் சாமர்த்தியசாலி நீங்கள் என்று சொல்லத் தேவையில்லை.

வாழ்க்கைக்கான விருப்பங்களை தேர்வு செய்யும் போது, உங்களுக்கான நேரத்தை எடுத்து முடிவை எடுப்பீர்கள். நீங்கள் எளிதாக யாரையும் எடை போடுவதில்லை. மற்றும் ஒருவரிடம் உங்கள் மனதை திறப்பதற்கு முன், அவரை பற்றி முற்றிலும் புரிந்து கொள்ள நினைப்பீர்கள். நீங்கள் எளிதில் யாரையும் நம்புவதில்லை. இதுவும் நல்லதுதான். இதற்கு முன் நீங்கள் பலமுறை பலரை நம்பி ஏமாந்திருக்கலாம்.

மேலும், உங்களுடனான முழுமையான குணநலன்களை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ற ஒரு துணையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள், எனவே நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக உங்கள் வாழ்க்கையின் படி நிலைகளுக்கு ஏறிச் செல்லலாம். நீங்களும் உங்கள் துணைவரும் ஒரு சிறந்த ஜோடியாக இருப்பீர்கள். நீங்கள் அவரை வாழ்க்கை துணையாக்க எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாக இந்த சிறப்பு உங்களைத் தேடி வரும்.

உங்கள் மரபை இந்த மண்ணில் பதிக்க காலமும் முயற்சியும் தேவை. இந்த உலகத்தில் நீங்கள் விரும்பும் குறிக்கோளை அடைய உங்கள் முழுமையான உறுதிப்பாடு மற்றும் நேர்மையையும் இது எடுத்துக் கொள்ளும். ஆனால் இறுதியில், உங்களை நினைவில் நிறுத்துகிற எதோ ஒன்றை நீங்கள் விட்டுச்செல்வீர்கள்.

உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் கனவை அடைய நீங்கள் மேற்கொள்ளும் உழைப்பு போன்றவை மற்றவர்களை ஊக்குவிப்பதாக அமையும். உங்களுடைய மரபு மேலோட்டமானதாக இருக்காது, ஆனால் தலைமுறை தலைமுறையினருக்கு உங்களைப் பின்வருமாறு ஊக்குவிக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும்.

இரண்டாம் வகை
இது உங்கள் பாதச் சுவடு என்றால், நீங்கள் எடுத்து வைக்கும் அடி விரைவாக இருக்கும். உங்கள் மூளை புத்திசாலித்தனமாக இருக்கும். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறும் தன்மையுள்ள நீங்கள், எல்லா சூழ்நிலைக்கும் உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள். இடத்திற்கு ஏற்றாற்போல் நிறம் மாறும் பச்சோந்தி என்று உங்களைச் சொல்லலாம். சூழ்நிலையின் பண்பை அறிந்து அதற்கேற்ற விதத்தில் உங்களை மாற்றிக் கொள்ளும் உங்கள் திறமை மற்றும் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். நரிகளுக்கு நடுவில் உங்களைத் தூக்கி எறிந்தாலும் வெற்றி வாகை சூடி வரும் ஆள் நீங்கள்.

வாழ்க்கை விருப்பங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் எந்த ஒரு விளைவைப் பற்றியும் யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள். எல்லாவற்றிலும் சிறந்ததை ஏற்படுத்தும் மனோபாவம் உங்களுக்கு உண்டு. சூழ்நிலையை கையாளத் தெரியும், உங்களையும் நிர்வகிக்க உங்களுக்குத் தெரியும். எந்த ஒரு விளைவும் உங்களை கடினமான முறையில் பாதிக்காது. உங்களுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணையும் அதிரடியாக, நகைச்சுவையுடன் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறைக் கருத்துகளுடன் இருப்பவர் தான்.

உங்களுடைய சொந்த வாழ்க்கை, மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் சாகசங்கள் புரிந்து கொண்டே வாழ்கையை கழிப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கை மரபு, திடீரென்று ஒரே நாள் இரவில் உருவாகும். உங்களுடைய யோசனைகள் அற்புதமாக இருக்கும்., நீங்கள் கடினமாக உழைப்பதைக் காட்டிலும், சாமர்த்தியமாக உழைப்பீர்கள்.

ஆகவே உங்கள் கனவுகள் உங்கள் கடின உழைப்பை விட சாமர்த்தியத்தை பிரதிபலிக்கும். சாமர்த்தியமான செயல் வெற்றியைத் தரும் என்று முழுமையாக நம்புவீர்கள். உங்கள் கனவுகள் நிஜமாக சில காலம் பிடிக்கும், நிஜமாகத் தொடங்கிவிட்டால், கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் புகழ் பெறுவீர்கள். உங்கள் வேலையில் உள்ள அழகைப் ரசித்து நீங்களே சிரித்துக் கொள்வீர்கள்.

மூன்றாம் வகை
இதுதான் உங்கள் பாதச் சுவடு என்றால், நீங்கள் உங்கள் சுயத்தை அறிந்தவர். எந்த ஒரு காரியத்திலும் ஜாக்கிரதையாக அடி எடுத்து வைப்பவர். அப்படி நீங்கள் வைக்கும் அடியில் உறுதியாக இருப்பவர். சிந்தனைவாதி, கருத்து சொல்பவர், மற்றும் ஆக்கபூர்வமானவர் நீங்கள். எந்த ஒரு முடிவையும் ஒரு நீண்ட யோசனைக்கு பின் எடுப்பவர். மேலும், நீங்கள் மற்றவரை விட உங்களை அதிகம் நம்புபவர் என்று அறியப்படுகிறது. உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர்.

நீங்கள் வாழ்க்கையில் எங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று உங்களுக்கு தீர்மானமாக தெரியும். உங்களுடைய தன்னம்பிக்கையுணர்வு உங்கள் மிகப்பெரிய சொத்து. உங்களுடைய தேவைகளைப் பற்றி நீங்கள் நன்கு உணர்ந்தவர் என்பதால் வாழ்க்கை விருப்பங்களில் சரியான முடிவுகளை மட்டுமே எடுப்பீர்கள். உங்களைக் குறித்த உங்கள் விழிப்புணர்வின் காரணமாக சரியான நபர்கள் மட்டுமே உங்களால் கவரப்படுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவர், உங்களை புரிந்து கொண்டவராக இருப்பார்.

உங்கள் சிந்தனையோடு நீங்கள் நேரம் செலவழிக்கும் உங்கள் இயல்பை புரிந்து கொள்ளக் கூடியவராக இருப்பார். நீங்களும் உங்கள் துணையும் அழகான எண்ணங்களால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வீர்கள், இருவரும் அறிவார்ந்த ஜோடியாக இணக்கமாக வாழ்வீர்கள்.

நீங்கள் ஒரு ஆக்கபூர்வ மனம் மற்றும் சிந்தனையுள்ள ஆளுமை கொண்டவர் என்பது உண்மை. ஆகவே உங்கள் மரபு ஒரு நூதனமானதாகவும் , பாராட்டுக்குரியதாகவும் இருக்கும் என்று புலப்படுகிறது. உணர்வுபூர்வமாக அழகுடனும் உணர்ச்சியுடனும் இருக்கும் மரபை நீங்கள் இந்த மண்ணில் விட்டுச் செல்வீர்கள். உங்கள் மரபு அதன் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் மற்றும் உங்கள் வேலையை கட்டமைக்க மற்றவர்களை ஊக்குவிக்க உதவும்.

உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் ஒரு புதிய பார்வைக்கு அடிப்படையை உருவாக்கும், ஒருமுறை இதனை உணர்ந்து கொண்டால் , புதிய தடைகளை உடைத்து, பல நூற்றாண்டுகள் வரை உங்கள் சிந்தனை நீடித்து இருக்கும்.

நீங்கள் எதை விட்டு செல்கிறீர்களோ, அதுவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி நேசித்தீர்கள் என்பதை வரையறுக்க உதவும். காலம் முழுவதும் உங்கள் நினைவுடன் மற்றவர்கள் இருக்க இதுவே சிறந்த வழியாகும். உங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். காலம் கடந்து உங்கள் நினைவுகள் வாழும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்க பிறந்த மாதத்த சொல்லுங்க! உங்க கடந்த கால, எதிர்கால காதலை பத்தி நாங்க சொல்றோம்!
Next articleஉங்களின் முகம் உங்களை பற்றி என்ன சொல்கிறதுனு தெரியுமா! இத படிச்சா தெரிஞ்சிக்கலாம் வாங்க!