இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் உதிரி பாங்கள் கடலில் மிதந்து வருவது கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிருடன் யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது என பாதுகாப்பு பிரிவின் தலைவர் முகமது ஸ்யாகி கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.
188 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.
6 விமான ஊழியர்கள், இரண்டு விமான ஓட்டிகள், 181 பயணிகள் என 189 நபர்கள் மாயம். அந்த 181 பயணிகளில் 1 குழந்தை மற்றும் 2 பச்சிளங்குழந்தைகளும் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலையை அறிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்களை அறிவித்திருக்கிறது இந்தோனேசிய அரசாங்கம். 021-80820000 மற்றும் 021-80820002 இந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம். அல்லது லையன் ஏர்லைன் நிறுவனத்தின் தொடர்பு மையத்தை + 62 8788 033 3170 இந்த எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம்.
போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மனம் உருகி வேண்டுதல். யாருக்கும் எதுவும் நடந்திருக்கக் கூடாது என மனம் உருகி பிரார்த்தனை செய்கின்றனர்.
கடலுக்குள் வீழ்ந்த விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன. இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் முகமது ஸ்யாகி இது குறித்து கூறுகையில் “உயிருடன் யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.