உலகிலேயே கொடிய தகாத உறவால் ஏற்படும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு பரவுகிறது தெரிந்து கொள்ளுங்கள் !
உலகிலேயே மிகவும் கொடிய மற்றும் அரிய வகையான பால்வினை நோய் கிருமியானது லண்டனில் உள்ள ஒரு மனிதரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது! தவறான உடல் உறவு மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களில் மிகவும் கொடிய வகை நோயான gonorrhoea -விற்கான அறிகுறியினை லண்டனில் உள்ள ஒரு மனிதரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது! இந்த மனிதர் இந்த ஆண்டின் முற்பகுதியில் தென் கிழக்கு ஆசிய பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்துக்கொண்டதன் மூலம் இவருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே முதன்முறையாக இவரிடம் இந்த நோய் கண்டறியப் பட்டிருப்பதனால் இந்த நோய்கான மருந்துகள் இதுவரை இல்லை எனவும், இனிமேல் தான் கண்டறியபட வேண்டும் எனவும் அவரை ஆராய்ந்து வரும் மருத்து குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு இவர் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்மனியினை தேடிவருகின்நதுடன், இச்சம்வத்திற்கு பின்னர் இவருடன் உடலுறவு வைத்துக்கொண்ட பல்வேறு பெண்களிடமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Gonorrhoea என்றால் என்ன?
இது Neisseria gonorrhoeae என்று பாக்டீரியாவால் ஏற்படுவதுடன், பாலியல் ரீதியாகவும், உடல் உறவு மூலமாகவும் அதாவது பாதுகாப்பற்ற யோனி, வாய்வழி அல்லது அக செக்ஸ் மூலமும,; நோய் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளுதல் மூலமும், தாய்க்கு இந்த நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு பரவக்கூடிய கொடிய நோய் ஆகும்.
பொதுவாக Gonorrhoea நோய் கொண்டுள்ளவர்கள் அதற்கான அறிகுறிகளை பெறாமல் இருந்தாலும், அவருடன் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவ முடியம் என்பதுடன், இந்த Gonorrhoea நோயானது, மனிதர்களின் அந்தரக பகுதிகளை சிதைத்தல், பெண்களின் கற்பப்பையினை சிதைத்தல் போன்ற காரியங்களையும் செய்கின்றது.
இவ்வாறாக, Gonorrhoea நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், பின்னர் இது மூட்டு அல்லது இதய வால்வுகளுக்கு பரவி பாரிய விளைவுகளை உண்டாக்கும்.
By: Tamilpiththan