தமிழர்களின் தேசிய திருவிழா பொங்கல் உள்ளிட்ட நாட்கள் அடங்கியுள்ள ஜனவரி மாதத்தினை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் நடப்பு மாதமான ஜனவரியை தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்திட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர்களின் கோரிக்கையினை ஏற்று நடப்பு ஜனவரி மாதத்தினை தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ராய் கூப்பர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: