நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர்கள் தனக்கு பட வாய்ப்பு வழங்குவதாக கூறி தன்னை பயன்படுத்தி கொண்டதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், நண்பர்கள் மூலம் லாரன்ஸை ஹொட்டலில் சந்திக்க நேர்ந்தது. அங்கு குரு ராகவேந்திரா படங்கள் எல்லாம் இருந்ததால் அவர் மீது மரியாதை வந்தது.
தான் ஏழை குடும்பத்திலிருந்து வந்ததாகவும், புதிதாக வாய்ப்பு கேட்பவர்களுக்கு உதவ நினைப்பதாகவும் லாரன்ஸ் என்னிடம் கூறியதால் அவரை நம்பினேன்.
ஆனால் மெதுவாக தன் உண்மை நிறத்தை அவர் காட்ட தொடங்கினார். என்னை வயிற்றை காட்ட சொன்னார்.
கண்ணாடி முன்னால் நின்று நடிக்க சொன்னார். பின்னர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து எனக்கு வாய்ப்பு தருவதாக கூறிய நிலையில் அவர் நட்பை தொடர்ந்தேன்.
ஆனால் வேறு ஒருவர் வில்லனாக அதில் வந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.