Home Jaffna News அனைவரையும் வியக்க வைக்கும் செயற்பாடு! இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா?

அனைவரையும் வியக்க வைக்கும் செயற்பாடு! இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா?

0
427

இலங்கையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் யக்கல பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி ஒன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் வீதி முழுவதும் மணல் பரவி கிடந்துள்ளது. இதனால் வீதியில் ஏனைய வாகனங்களுக்கு பயணிக்க முடியாத அளவு சிரமங்கள் ஏற்பட்டது.

எனினும் அந்த மணலை அகற்ற எவரும் முன்வரவில்லை. மணலை அகற்றவில்லை என்றால் இன்னுமொரு விபத்து ஏற்படும் என்பதனால், பொலிஸ் அதிகாரி ஒருவர் தனியாக அந்த மணலை அகற்றியுள்ளார்.

பொதுவாக இலங்கை பொலிஸார் மீது தவறான பெயர் ஒன்றே உள்ள நிலையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எடுத்துக்காட்டாகும்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Previous articleசினை‌ப்பை‌யில் நீர் கோர்த்து ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் ஏ‌ற்படு‌ம் நோய்!
Next articleவ‌யி‌ற்‌‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுகளினால் செ‌ரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு!