மகரம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்

ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடம் 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், ஆண்டின் முற்பாதியில் குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள் வம்பு வழக்குகள் யாவும் விலகும்.

உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கறை எடுத்த கொள்வது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்யமாட்டார் என்றாலும் எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர் கொண்டு வெற்றிப் பெறக்கூடிய வலிமையை பெறுவீர்கள். 12-ல் கேது சஞ்சரிப்பதால் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளும் கிட்டும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குருபகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள்.

உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தொழில் வியாபாரம்
கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு உங்களுக்கு மகிழ்ச்சினை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது. திருமண சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று நிதானமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.

மாதப்பலன்

சித்திரை
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இல்லை. பண வரவுகள் சுமாராக இருக்கக் கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சற்று வேலைபளு அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வைகாசி
ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

ஆனி
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று கைநிறைய சம்பாதிப்பார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ஆடி
குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் தடையின்றிப் பெற முடியும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

ஆவணி
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை அனுகூலமாக இருக்கும். இம்மாதம் சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம்-. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.

புரட்டாசி
ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களைக் குறைக்க முடியும். சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உறவினர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து விட முடியும். சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸதர்களுக்கு பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்-. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஐப்பசி
ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். வரும் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

கார்த்திகை
ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்களை அடைய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.


மார்கழி
ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் 12-ல் சூரியன், குரு, சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகளையும் உண்டாக்கும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ பொருமானை வழிபடுவது நல்லது.

தை
ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். 12-ல் குரு சனி சஞ்சரிப்பதால் சுகவாழ்வில் பாதிப்பு, அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமற்ற பலன் உண்டாகும். கணவன்- மனைவி எதிலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர் என்றாலும் சற்றே அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத விரயங்கள் ஏற்படகூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது உத்தமம். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்றே குறையும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

மாசி
ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைய முடியும் என்றாலும் ஜென்ம ராசியில் சனி, 12-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை சிறப்பாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் பலவகையில் நற்பலன்களைப் பெற முடியும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

பங்குனி
மாதகோளான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் நினைத்தது நிறைவேறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் எந்தவொரு காரியத்தையும் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் போட்டிகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் – 5,6,7,8
கிழமை – சனி, புதன்
திசை – மேற்கு
நிறம் – நீலம், பச்சை
கல் – நீலக்கல்
தெய்வம் – ஐயப்பன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020 !
Next articleயாழ்.பல்கலை மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை! பொலிஸாரின் பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ள ஆவா குழு!