தனுசு – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் உங்கள் வாழ்வில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதும், 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குருபகவானும் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருக்கணிதப்படி இவ்வருடம் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்பட்டாலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் ஆண்டின் பிற்பாதியில் குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சொந்த பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கலில் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் கைக்கு வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்பு உடையவற்றால் சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் முலம் ஆதாயப் பலன்களையும் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து பணியில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். உங்களின் முன்கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சனைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடை தாமங்களுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடை தாமங்களுக்குப் பின் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதால் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்
கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல் ஏற்படும். நிறைய போட்டி பொறாமைகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின் வசூலித்து விடுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிபடியாக நிவர்த்தியாகும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெறவே அரும்பாடுபட வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் ஒரளவுக்கு அவர்களின் செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது உத்தமம்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். உங்களுக்குள்ள வம்பு பிரச்சினைகள் யாவும் ஓரளவுக்கு விலகும். கால்நடைகளால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பொன் பொருள் யாவும் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகங்கள் உண்டாகும். தாய் வழியில் ஆதரவு கிட்டும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும் அயாராத உழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம்.

மாதப்பலன்
சித்திரை
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

வைகாசி
மாத கோளான சூரியன் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்றே குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ஆனி
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைப்பெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது வேகத்தைக் குறைப்பது நற்பலனை தரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆடி
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களை குறைப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய லாபம் தடையின்றி வந்தடையும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். முருகனை வழிபடுவது நல்லது.

ஆவணி
ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் ஓரளவு குறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவ பெருமானை வழிபடவும்.

புரட்டாசி
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்திலிருந்த கடன் சுமைகள் குறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள், சேரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

ஐப்பசி
செவ்வாய் 10-ல், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். 19-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். விநாயகரை தினமும் வழிபடவும்.

கார்த்திகை
ஜென்ம ராசியில் குரு, சனி சஞ்சரித்தாலும் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். அரசு வழியில் சில உதவிகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மார்கழி
ஜென்ம ராசியில் சூரியன், சனி, குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் வாங்கும் நிலை ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

தை
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகள் சற்று தாராளமாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடவும்.

மாசி
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் நற்பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களன் ஆதரவுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

பங்குனி
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளளவர்களிடம் தேவையற்ற வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதுடன் போட்டிகளும் அதிகரிக்கும். கூட்டாளிகளால் நற்பலன் அமையும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். வேலைபளு சற்றே அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9
கிழமை – வியாழன், திங்கள்,
திசை – வடகிழக்கு,
நிறம் – மஞ்சள், சிகப்பு,
கல் – புஷ்ப ராகம்,
தெய்வம் – தட்சிணாமூர்த்தி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 11.04.2019 வியாழக்கிழமை !
Next articleமகரம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !